முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் தொகுதியில் கர்ப்பிணி தாய்மார்கள் 600 பேருக்கு சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்:

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் சார்பில் 600க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு விழாக்களை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழகம் முழுவதிலும் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வசித்திடும் ஏழை,எளிய கர்ப்பிணி தாய்மார்கள் பயன்பெற்றிடும் வகையில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் சார்பில்சமுதாய வளைகாப்பு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம்,திருமங்கலம் தொகுதியிலுள்ள சிவரக்கோட்டை, திருமங்கலம்,டி.கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் வளாகத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.அதன்படி திருமங்கலம் தொகுதியிலுள்ள திருமங்கலம் நகரம்,திருமங்கலம் ஒன்றியம்,கள்ளிக்குடி ஒன்றியம் மற்றும் டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணி தாய்மார்கள் 600க்கும் மேற்பட்டோருக்கு மலர் மாலையணிவித்து, வளையலிட்டு சந்தனம் பூசி,குங்கும திலகமிட்டு ,பழங்களுடன் தட்டுதாம்பாள பொருட்கள் வழங்கப்பட்டது.மதுரை மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த சமுதாய வளைகாப்பு விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்ததுடன்  கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்திப் பேசினார்.இதை தொடர்ந்து சமுதாய வளைகாப்பு நிகழச்சியில் பங்கேற்ற அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் அறுசுவை வளைகாப்பு உணவு பரிமாறப்பட்டது.
இந்நிகழச்சிகளில்    உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர்.அர்ஜூன்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,இலக்கியஅணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன்,உலகாணி மகாலிங்கம்,ராமசாமி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் அவைத் தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம்,முன்னாள் யூனியன் துணைச் சேர்மன்கள் பாவடியான்,கண்ணன்,திருமங்கலம் ஒன்றிய அவைத் தலைவர் அன்னக்கொடி,துணை செயலாளர்கள் சுகுமார்,சுமதிசாமிநாதன்,கட்சி வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஸ்வரன்,பாண்டியராஜன்,பேரூர் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன்,நெடுமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள்,அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து