முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதரீதியிலான பிரிவினையை இந்தியா மீண்டும் 2047-ல் எதிர்கொள்ளும் மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,கடந்த 1947-ம் ஆண்டில் நிகழ்ந்தது போல், 2047-ம் ஆண்டில் இந்தியா மீண்டும் மத ரீதியிலான பிரிவினையை எதிர்கொள்ளப் போகிறது என்று மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா மத ரீதியில் பிரிக்கப்பட்டது. அதேபோன்ற சூழல் 2047-ம் ஆண்டு நிகழப் போகிறது. கடந்த 72 ஆண்டுகளில் மக்கள்தொகை 33 கோடியில் இருந்து 135.7 கோடியாக அதிகரித்து விட்டது. அதிகரித்து வரும் மக்கள்தொகைப் பெருக்கத்தால் பல்வேறு பிரிவினைகள் உண்டாகும். ஏற்கெனவே சிறப்புச் சட்டம் 35 ஏ குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் போது, அடுத்து வரும் ஆண்டுகளில் பாரதம் என்று கூறுவது கடினமாகி விடும் எனத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்கு அவர் பதில் அளித்ததாவது:- இந்தியாவில் வாக்கு வங்கி அரசியல் இருக்கும் போது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த தனிக்கொள்கை வகுப்பது என்பது சாத்தியமில்லை. ஆனால், ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்று விரும்பினால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கொள்கை அவசியம். இவ்வாறு கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து