முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சென்னை வானிலை மையம் தகவல்

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,மத்திய வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை வெளுத்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.இதனால் சென்னை முழுவதும் வெப்பம் தணிந்தது குளுகுளு சூழல் நிலவியது. இதனால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்: மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகும். இதன் காரணமாக வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இடைவெளி விட்டு அவ்வப்போது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

தமிழக கடலோர பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சையில் 11 செ.மீ., மழை பெய்துள்ளது இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து