எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி- தேனி மாவட்டம், சின்னமனூர் நகர் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 110வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சின்னமனூர் நகர் கழக செயலாளர் கண்ணம்மாள் கார்டன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக அவைத்தலைவர் கண்ணன், இளநீர்ராமர், செல்வம், தீபஜோதி செல்விமதிவாணன், அகிலன் உள்ளிட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழக செயலாளர் விமலேஸ்வரன் வரவேற்றார். இக்கூட்டத்தில் மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ., மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார், தலைமைகழக பேச்சாளர்கள் குமரிபிரபாகரன், குறள்பித்தன், டி.வி.சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ பேசும்போது பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவை மற்ற திராவிட கட்சிகள் கொண்டாடினாலும், அவரின் புகழை நிலைநிறுத்துகின்ற, கொண்டாடுகின்ற உரிமை, தகுதி நமது கழகத்திற்கு மட்டுமே இருக்கிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிவு, ஆற்றலை பார்த்து, சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் உள்ளிட்ட மாமேதைகளுக்கு சமமாக பேரறிஞர் அண்ணா அவர்களை தென்னாட்டு பெர்னாட்ஷா என்றும் இந்நாட்டு இங்கர்சால் என்று பெருமையாக அழைக்கப்பட்டார். தந்தை பெரியார் வழியில் அறிஞர் அண்ணா அவர்கள் தனது எழுத்தாற்றல், பேச்சாற்றலால், தமிழர்களின் வீரத்தை விவேகத்தை, உயரிய பண்புகளை நிரூபிக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்த பாடுபட்டார். சுதந்திர இந்திய நாட்டில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலையை தனது பேச்சாற்றல், எழுத்தாற்றலால் உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா. அவர் மிகச்சிறந்த சட்டமன்ற உறுப்பினராக, மேலவை உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். பாராளுமன்றத்தில் அறிஞர் அண்ணாவின் மிகச்சிறந்த பேச்சாற்றலை கண்டு வியந்து அவரை தொடர்ந்து பேச அனுமதித்தவர் அன்றைய பிரதமர் ஜவஹர்லால்நேரு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு போன்ற அண்ணாவின் கருத்துக்கள் தமிழ்நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைத்தது. இந்த அற்புத தலைவரின் வழியிலே நான் நடப்பேன் என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அண்ணாவின் புகழை பரப்பும் வகையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆட்சிக்காலத்திலே தான் அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா போக்குவரத்து கழகம், அண்ணா மாவட்டம் என அண்ணாவின் பெயரில் உருவாக்கப்பட்டது. அண்ணா அவர்கள் தேர்தலில் பசி பட்டினியை போக்கும் வகையில் 3 படி லட்சியம் 1 படி நிச்சயம் என்று கூறி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதை செய்து காண்பித்தார். சென்னை கோவையில் எரியாத வீடுகளை ஏழை எளியோருக்கு கட்டி தந்தார். உலக தமிழ் மாநாட்டை நடத்தி காண்பித்தார். பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின்னால் தனது சூழ்ச்சியால் கருணாநிதி திமுக தலைவரானார். அதனை தொடர்ந்து திமுகவை தனது குடும்ப கட்சியாக மாற்றினார். இதனை எதிர்த்த புரட்சித்தலைவரை கருணாநிதி வெளியேற்றினார். பின்னர் புரட்சித்தலைவர் அதிமுகவை ஆரம்பித்தார். திண்டுக்கல் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். அடுத்தடுத்த தேர்தல்களில் புரட்சித்தலைவர் மிகப் பெரிய வெற்றி பெற்றார். தற்போது புதிதாக கட்சி ஆரம்பிக்க உள்ள ரஜினி, கமல் ஆகியோர் கட்சி ஆரம்பிக்கவே 3 ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும் இவர்கள் இடைத்தேர்தலை தைரியமாக சந்திப்பார்களா? தமிழகத்தின் தலையாய பிரச்னைகளான காவேரி, கண்ணகி கோவில், முல்லைபெரியாறு, கச்சத்தீவு, மீனவர், இலங்கை தமிழர்கள் என அனைத்து பிரச்னைகளிலும் தமிழக மக்களை காப்பாற்றும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டரீதியாக பல போராட்டங்களை நடத்தி தமிழர்களின் ஜீவாதார உரிமையை பெற்று தந்திருக்கிறார்கள். தமிழகத்தில் ஏராளமான அற்புதமான திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். இது போன்ற திட்டங்களை இனி யாராலும் முறியடிக்க முடியாது. அதன் பயனாக இன்று தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பின்னால் நமது இயக்கத்தை, ஆட்சியை சிதைத்து விடலாம், சின்னத்தை முடக்கி விடலாம் என டிடிவி தினகரன் உட்பட பலரும் திட்டமிட்டார்கள். பொய் வழக்கு போட்டனர். முடிந்ததா? தற்போது 19 மாதங்களை கடந்து நமது கழக ஆட்சியை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். இடையில் ஆர்.கே. நகர் தேர்தலில் நாம் சிறிது ஏமாந்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. வரும் தேர்தல்களில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கின்ற நமது இயக்கம் மாபெரும் வெற்றியை பெறும் என்று சிறப்புரையாற்றினார்.
கம்பம் நகர அவைத்தலைவர் காந்தி, துணை செயலாளர் ஆசிக்அகமது, மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.