முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறுப் பேசிய வழக்கில் 4 வாரத்துக்குள் ஆஜராக வேண்டும்:எச்.ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 4 வாரத்துக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், நீதிமன்றங்களையும், காவல்துறை குறித்தும் பா.ஜ.க. தேசியச் செயலர் எச். ராஜா அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து நீதிமன்றமே தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற வழக்குரைஞரின் முறையீட்டை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் நிராகரித்துவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கை தாமாக விசாரிக்க முன் வந்த நீதிபதி சி.டி. செல்வம், எச்.ராஜாவை 4 வாரத்துக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து