முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த மாட்டுத் தரகர் கைது

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      தேனி
Image Unavailable

போடி,-    போடி அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தில் மாட்டுத் தரகரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
     போடி அரசு பொறியியல் கல்லூரி மாணவர் விடுதி அருகே தனியார் தோட்டத்தில்,
தேனி மாவட்டம் கீழக்கூடலூர் ஆர்.எஸ். பள்ளி தெருவை சேர்ந்தவர் கண்ணன் மனைவி முருகேஸ்வரி (30). என்பவர் கத்திக் குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இவர் போடி தருமத்துப்பட்டிக்கு வந்தது எப்படி, கொலையானது எப்படி என போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
     அப்போது கொலை செய்யப்பட்ட முருகேஸ்வரியின் சடலத்திற்கு அருகே கிடந்த துண்டு சீட்டில் இருந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்த போலீஸார் போடி சிலமலை கிராமத்தை சேர்ந்த ராசு மகன் முருகன் (50) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததன் அடிப்படையில் போடி தாலுகா போலீஸார் தெரிவித்தது:
     முருகன் மாட்டு தரகராக வேலை செய்து வந்தார். இவருக்கும் கீழக்கூடலூரை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் தொழில் முறையில் பழக்கம். சுரேசை பார்க்க செல்லும்போது சுமதி என்பவருடன் முருகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சுமதியின் மாமனார் சின்னச்சாமியிடம், முருகேஸ்வரி மூலம் சுரேஷ்  பணம் வாங்கியுள்ளார்.
     அதனை திருப்பி கேட்க சுமதியுடன் சென்ற முருகனை, முருகேஸ்வரி செருப்பால் அடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த முன் விரோதத்தை வைத்து முருகேஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்ட முருகன் அவரை ஏமாற்றி போடி தருமத்துப்பட்டிக்கு வரவழைத்து அங்கு வைத்து கத்தியால் குத்தி கொலை செய்தாராம்.
      இதனையடுத்து முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர். மேலும் முருகன் மட்டுமே இந்த கொலையை செய்தாரா அல்லது வேறு யாரும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளனரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து