முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா சட்டசபையில் மெஜாரிட்டியை பா.ஜ.க. நிரூபிக்க வேண்டும்: கவர்னரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பனாஜி : கோவா சட்டப் பேரவையில் பா.ஜ.க. தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மாநில சட்டப் பேரவையில் ஆளும் பா.ஜ.க. தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கவர்னர் மிருதுளா சின்ஹாவை நேரில் சந்தித்து காங்கிரஸ் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாநிலத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லிகர் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவை நேரில் சந்தித்தனர். அப்போது, சட்டப் பேரவையில் பாஜக தனது பலத்தை நிரூபிக்க வலியுறுத்த வேண்டும். இதற்காக ஒரு நாள் மட்டும் பேரவையைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகாந்த், இந்த விஷயம் குறித்து அடுத்த 3-4 நாள்களில் முடிவெடுப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். பேரவையில் பா.ஜ.க.வைவிட, காங்கிரஸ் கட்சிக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்' என்றார்.

40 உறுப்பினர்கள் கொண்ட கோவா பேரவையில் பா.ஜ.க.வுக்கு 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதே நேரத்தில் காங்கிரஸுக்கு 16 எம்,எல்,ஏ,க்கள் உள்ளனர். எனினும், கோவா முன்னேற்றக் கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் 3 எம்.எல்.ஏ.க்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்எல்ஏ மற்றும் 3 சுயேச்சைகளின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற கோவா பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸை அப்போது ஆட்சி அமைக்க அழைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து