முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் ஒப்பந்த விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை இல்லை - நிர்மலா சீதாராமன் பேட்டி

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிராகரித்தார்.

இதுகுறித்து டெல்லியில் இந்திய மகளிர் பத்திரிகையாளர்கள் சங்கத்தினருடன் நடத்திய கலந்துரையாடலின்போது நிர்மலா சீதாராமன் கூறுகையில், "ரபேல் ஒப்பந்த விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு எதற்கு? இதுதொடர்பாக அனைத்து விவரங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். அதை எதிர்க்கட்சிகள் ஆய்வு செய்து கொள்ள வேண்டும்' என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

உற்பத்தி தொடர்பான நிபந்தனைகளை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனமும், பிரான்ஸின் டஸால்ட் நிறுவனமும் ஒப்பு கொள்ளவில்லை. இதனால் அந்த 2 நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடியவில்லை.

இதையடுத்து, ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இயலாது என்று டஸால்ட் தெரிவித்தது. இதையேற்று, ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தை ரபேல் ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்து விட்டது அப்போதைய காங்கிரஸ் அரசு என்றார் நிர்மலா சீதாராமன்.

பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கும் நற்பெயருக்கு நிர்மலா சீதாராமன் களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி புகார் கூறியிருந்தார். இந்நிலையில் இவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து