முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை: பாக். ராணுவம் வெறிச்செயல் - ஜம்மு எல்லையில் பதட்டம்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கழுத்தை அறுத்து கொன்றதை தொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணிபுரியும் நரேந்திர குமார் என்பவர் மாயமானார். அவரை கண்டுபிடிக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ரோந்து பணியில், இணைந்து ஈடுபடுமாறு பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.

மாலை வேளையில் இந்திய வீரர்கள், தேடும் பணியில் ஈடுபட்ட போது, ராம்கார்க் செக்டார் பகுதியில், இரு நாட்டு எல்லையில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலி அருகே நரேந்திர குமாரின் உடல் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் 3 தோட்டாக்கள் பாய்ந்திருந்ததையும் இந்திய வீரர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து எல்லை கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் பணியில் உள்ள இந்திய வீரர்கள் உஷார்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம், இருநாட்டு எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து