முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர்களின் தினசரி வருகையை பதிவு செய்ய நவீன மின்னணு முக அமைப்பு பதிவேடு ஆணையாளர் அனீஷ் சேகர் துவக்கி வைத்தார்.

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை,- மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 தெற்கு வெளி வீதியில் உள்ள ஈ.வெ.ரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களின் தினசரி வருகையை பதிவு செய்வதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன மின்னணு முக அமைப்பு பதிவேடு  இயந்திரத்தை ஆணையாளர்  .அனீஷ் சேகர்,  துவக்கி வைத்தார்.
 மதுரை மாநகராட்சியில் காகித பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், பணியாளர்களின் தினசரி வருகையை கண்காணிக்கும் வகையிலும் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் நான்கு மண்டல அலுவலகங்கள் என  6 பயோ மெட்ரிக் கை ரேகை பதிவு செய்யும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு தினசரி வருகை பதிவு செய்யப்பட்டு  அதன் அடிப்படையில் மாதாந்திர ஊதியம் கணக்கிட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்களின் வருகையை பதிவு செய்வதற்காகவும் கண்காணிப்பதற்காகவும் வார்டு அலுவலகங்களில் நவீன மின்னணு முக அமைப்பு பதிவேடு          இயந்திரம் பொருத்தப்;பட்டுள்ளது.
 அதன் முதற்கட்டமாக மாநகராட்சி ஈ.வெ.ரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள இயந்திரத்தினை ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் முகத்தை பதிவு செய்யும் முறையினை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சியில் 54 பள்ளிகளில் முக அமைப்பு பதிவேடு பொருத்தப்பட்டு வருகை பதிவேடு பதிவு செய்யப்படுவதுடன், அதன் அடிப்படையில் ஊதியம் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.
    இந்நிகழ்ச்சியில் கல்வி அலுவலர்  ராஜேந்திரன், உதவி ஆணையாளர்  .பிரேம்குமார், மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்திரவேல், சுகாதார அலுவலர்  .ராஜ்கண்ணன், தலைமை ஆசிரியர்  கிருஷ்ணாகுமாரி உட்பட மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து