முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் கைலாசநாதர் கோவிலில் உலக நன்மை , மழைவேண்டி மஹா ருத்ரஹோமயாக பூஜை

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம்- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உலக நன்மைவேண்டியும், நல்லமழை பெய்து விவசாய பயிர்கள்செழிக்கவேண்டியும், கண்மாய்,குளங்கள் நிரம்பி நீர்நிலைகள் உயரவேண்டியும், வறட்சிநிலை மாறி பூமி செழிக்கவும்,மஹாருத்ர ஹோமயாக பூஜை கோவில் சன்னதிமுன்பாக கலசங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டுநடந்தது.  இந்த யாகபூஜை 2 நாட்கள் நடந்து நிறைவுபெற்றது. இதில் கைலாசநாதருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம்,ருத்திரமாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனைகள் நடந்தது. யாகத்தில் பல்வேறு வகையான முலிகைபொருட்கள் பயன்படுத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. தொடர்ந்து முலவர் கைலாசநாதர் செண்பகவள்ளி அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இந்தவிழாவில் சுற்றுவட்டார பகுதிகள், வெளிமாவட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.  அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களும்,கோவில் குருக்களும் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து