எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் ரூ.6கோடி மதிப்பீட்டில் புதிதாக சிமெண்ட் பேவர்பிளாக் சாலைகள் அமைத்திடும் வளர்ச்சித் திட்டங்களுக்கான பூமிபூஜையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் வசித்திடும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்ட முயற்சியின் பலனாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி பகுதியிலுள்ள 15தெருக்களில் ரூ.3கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கூடிய புதிதான சிமெண்ட் பேவர்பிளாக் சாலைகள் அமைத்தல் மற்றும் பேரையூர் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் ரூ.3கோடி செலவில் பேவர்பிளாக் சாலைகள் அமைப்பதுடன் பேரையூர் பைபாஸ் சாலையில் புதிய தார்ச்சாலை,தடுப்புச்சுவருடன் வடிகால் கட்டிட திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து பேரையூர்,டி.கல்லுப்பட்டி ஆகிய இரு பேரூராட்சிகளிலும் ரூ.6கோடி மதிப்பீட்டிலான பணிகளின் தொடக்கவிழா பூமிபூஜையுடன் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் முனைவர்.நடராஜன் தலைமை வகித்தார்.ஏராளமாக பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் ரூ.6கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து திலகமிட்டு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிதாவது: பொது மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி உருவாக்கித் தருவதில் அம்மா அவர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள். அந்த வழியில் தான் முதல்வரும் துணைமுதல்வரும் மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.பேரையூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் அம்மாவின் அரசு ரூ.2கோடி செலவில் பைபாஸ் சாலை முழுவதுமாக சீரமைக்கப்பட்டு தார்ச்சாலை அமைக்கிறது.அம்மாவின் அரசு ஏழைகளுக்கான அரசு,சாமானியர்களுக்கான அரசு,தாய்மார்களின் அரசாக திகழ்கிறது.
நிறை பேர் உங்களை வந்து சந்திப்பார்கள்,பல்வேறு ஆதாரமில்லாத கட்டுக் கதைகளை கட்டவிழ்த்து விடுவார்கள்.அதற்கு பொதுமக்கள் செவி சாய்த்திட வேண்டாம்.அம்மாவின் அரசு செயல்படுத்திடும் திட்டங்கள் அனைத்தினாலும் ஏழைகளும்,சாமானியர்களும்,தாய்மார்களும் என அனைத்து பிரிவினரும் பயன்பெற்றிடுவார்கள்.இது போன்ற சிறப்பான திட்டங்களினால் இந்தியாவின் இரண்டாவது மாநிலமாக நமது அன்னைத் தமிழகம் விருது பெற்று சாதனை படைத்திருக்கிறது.அதே போல் துறை தோறும் தேசிய விருதுகளை அம்மாவின் அரசு வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது.அம்மாவுடைய அரசின் ஆயுள் காலத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்று எத்தனையோ பேர் கனவு கண்டாலும் கூட அந்த கனவு பகல்கனவாகத் தான் போகும்.ஏனென்றால் காவல் தெய்வங்களாக தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்று பேசினார்.
இந்த விழாவில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன்,பேரையூர் வட்டாட்சியர் இளமுருகன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,கள்ளிக்குடி ஒன்றியச் செயலாளர் உலகாணி மகாலிங்கம்,திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் அன்பழகன்,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் துணைச் சேர்மன் பாவடியான்,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன் கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,சுகுமார்,அன்னகொடி,சாமிநாதன்,முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,பாஸ்கரன்,தர்மர்,பழனிச்செல்வி ராமகிருஷ்ணன்,நாகலட்சுமி,மீனாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.