முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓணம் பண்டிகை பம்பர் லாட்டரியில் விதவை பெண்ணுக்கு ரூ. 10 கோடி பரிசு

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,கேரளாவில், அரசு சார்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட பம்பர் லாட்டரியில் ஏழை விதவைப் பெண்ணுக்கு 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

கேரள அரசு சார்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு லாட்டரியில் பம்பர் பரிசாக ரூ.10 கோடி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த குலுக்கலில் கேரள மந்திரிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குலுக்கல் முடிந்து நேற்று முன்தினம் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், சிறப்பு பம்பர் பரிசு 10 கோடி ரூபாய், வல்ஸலா (56) என்ற ஏழை விதவைப் பெண்ணுக்கு கிடைத்துள்ளது.

திருச்சூர் அருகே உள்ள சித்தலப்பிலி பகுதியை சேர்ந்த வல்ஸலா கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். அரசின் வரிகள் போக மீதி அவருக்கு 6 கோடியே 34 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து