முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க.தான் நெல்லை வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

நெல்லை,இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி தி.மு.க.தான் என்று நெல்லை கே.டி.சி. நகரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். திருநெல்வேலி மாவட்டம், கே.டி.சி.நகரில், நேற்று அ.தி.மு.க. மாவட்ட கழகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பலமாக இருக்க வேண்டும்...இந்தக் கழகத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அவரைத் தொடர்ந்து இந்தக் கழகத்தைக் கட்டிக் காத்த அம்மாவின் வேண்டுகோளை ஏற்று, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றியைத் தேடித் தந்தீர்கள். அதே போல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், அம்மாவிற்கு கொடுத்த அதே ஆதரவை அம்மாவினுடைய அரசிற்கும் அளித்து, தமிழகத்தின் உரிமையை காப்பதற்கும், நமது உரிமையை நிலைநாட்டுவதற்கும், நம்முடைய மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கும், மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், தமிழகத்திற்கு தேவையான நிதிகளைப் பெறுவதற்கும் நாம் பலமாக இருந்தால்தான் முடியும்.

உருவாக்கித் தர வேண்டும்...ஏற்கனவே அம்மா இருக்கின்றபொழுது 37 நாடாளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் வழங்கிய காரணத்தினால்தான் நாம் தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களைப் பெற முடிந்தது, உரிமைகளைப் பெற முடிந்தது,  அதே நிலையை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும். இன்றைக்கு எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை எதிர்க்கின்றார்கள், அம்மாவினுடைய அரசை எதிர்க்கின்றார்கள், அவர்கள் கனவு கண்டார்கள், அம்மா மறைந்த பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்து விடும், இந்தக் கட்சி உடைந்து விடும் என்று நினைத்தார்கள்.  ஆனால், இங்கே குழுமியிருக்கின்ற மக்களுடைய நல் ஆதரவோடு, இருபெரும் தலைவர்களின் ஆசியோடு அ.தி.மு.க. இயக்கம் பலம் பொருந்திய இயக்கமாக முன்னேறியிருக்கிறது. இந்திய துணைக்கண்டத்திலேயே நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அம்மா உருவாக்கித் தந்து விட்டு சென்றிருக்கின்றார்.

இந்த கட்சியில் இடம் ...எம்.ஜி.ஆர். தன் வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்களுக்காக உழைத்து, நாட்டு மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக துவக்கிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.  ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் குடும்பத்திற்காக இருக்கின்ற கட்சி.  கருணாநிதி, கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி, அவருக்குப் பிறகு அவருடைய மகன்.  ஆக, வாரிசு அரசியல் அங்கே இருக்கின்றன. இங்கே அப்படியல்ல, உழைக்கின்றவர்கள், இந்த இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கின்றவர்கள், இங்கே என்முன் இருக்கின்ற நாட்டு மக்களுக்கு என்ன நன்மை செய்ய வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்ற மக்கள் ஆதரவு பெற்றவர்களுக்குத்தான் இந்த கட்சியில் இடம் இருக்கின்றது, அப்படிப்பட்டவர்கள் தான் இப்பொழுது பதவியிலே இருக்கின்றோம்.

பதவிக்கு வரமுடியும்...நானெல்லாம் விவசாயக் குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்தவன், மேடையிலே வீற்றிருப்பவர்கள் எல்லாம் சாதாரண குடும்பத்திலே பிறந்து வளர்ந்தவர்கள், உழைக்கின்றவர்கள், உழைத்து முன்னுக்கு வந்தவர்கள். ஆனால் ஸ்டாலின், கொல்லைப் புறத்தின் வழியாக பதவிக்கு வந்தார். எத்தனையோ தி.மு.க.-வினர் இருக்கின்றார்கள், கட்சிக்கு உழைத்தவர்கள் இருக்கின்றார்கள், யாராவது பதவிக்கு வர முடியுமா?  அ.தி.மு.க.வில்தான் சாதாரண விவசாயி கூட தமிழகத்தினுடைய முதல்வராக முடியும் என்ற நிலை இருக்கின்றது.  இங்கே என்முன் நிற்கின்றீர்களே, நீங்கள் கூட ஒரு காலத்தில் நிச்சயம் பதவிக்கு வரமுடியும்.

குடும்ப அரசியலாக... இந்த இயக்கத்தில்தான் அது முடியும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் முடியாது.  ஏனென்று சொன்னால், அது குடும்ப அரசியலாக மாறி விட்டது. தனக்கு, பேரனுக்கு பதவி வேண்டும், மகனுக்கு பதவி வேண்டும், மகளுக்கு பதவி வேண்டும். அப்படித்தான் குடும்ப அரசியல் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கருணாநிதி எப்பொழுதாவது டெல்லிக்குச் செல்கின்ற பொழுது மக்களின் பிரச்சினையை பேசியிருக்கின்றாரா? கிடையவே, கிடையாது. தன் மகளுக்கு என்ன பதவி கிடைக்க வேண்டும், பேரனுக்கு என்ன பதவி கிடைக்க வேண்டும், மகனுக்கு என்ன பதவி கிடைக்க வேண்டும் என்பதை பேசுவதற்காகத் தான் டெல்லி செல்வாரோயொழிய, தமிழக மக்களுடைய நலன் காப்பதற்காக எந்த ஒரு முறையாவது டெல்லிக்குச் சென்று வாதாடியிருக்கின்றாரா ? எண்ணிப் பாருங்கள். அவர்தான் அப்படியென்றால், அவருடைய மகனும் அப்படித்தான். நாள்தோறும் ஒரு பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றார், இங்கே ஊழல், அங்கே ஊழல்.  ஓட்டுமொத்த ஊழலினுடைய உருவமே திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

திட்டமிட்டு பொய் பிரச்சாரம்...தி.மு.க. என்றால் ஊழல். ஊழலென்றால் அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகக் கட்சி. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி தி.மு.க. ஒன்றுதான், வேறு எந்த கட்சியும் ஊழலுக்காக கலைக்கப்படவில்லை. ஆகவே, அப்படிப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள், அந்தக் கட்சியினுடைய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க அரசை இன்றைக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார், அ.தி.மு.க.  இருபெரும் கட்சித் தலைவர்கள் உருவாக்கிய இயக்கம், மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம், ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுடைய பொருளாதார மேம்பாடு உயர வேண்டும் என்பதற்காக அரும்பாடுபடுகின்ற இயக்கம், இது உங்களுடைய இயக்கம். இது  உங்களுடைய கட்சி. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து