முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது: ஜெட்லி திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டுவதால் எல்லாம் ரபேல் ஒப்பந்தத்ததை ரத்து செய்ய முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே சமீபத்தில் செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

காங்கிரஸ் தலைவரான ராகுல் இந்த விவகாரத்தில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டுவதால் எல்லாம் ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மத்திய அரசு மீது கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கும், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே சமீபத்தில் ரபேல் விமானம் குறித்து அளித்த பேட்டிக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று தோன்றுகிறது.

முதலில் இதுதொடர்பாக ராகுல் டுவிட்டரில் ஒரு கருத்து தெரிவிக்கிறார். அடுத்த சில வாரங்களில் ஹாலண்டேவின் கருத்து வெளியாகிறது. இந்த இரண்டு கருத்துக்களும் நன்கு திட்டமிட்டு வெளியிடப்பட்டது போலவும், இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாகத் தோன்றுகிறது. இரண்டும் ஒரே அலைவரிசையில் இருக்கின்றன

மொத்தமாக ராகுல் ஏதோ ஒரு விதமான பழிவாங்கும் எண்ணத்தில் இருக்கிறார் என்று தோன்றுகிறது. இந்த மொத்த குற்றச்சாட்டுகளுமே திட்டமிட்ட ஒன்றாக இருந்தால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனென்றால் இரு நாடுகளின் எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே அலைவரிசையில் பேசுகின்றனர்.

ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டுவதால் எல்லாம் ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. திட்டமிட்டபடி ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடையும். இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து