முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் போர் விமான ஒப்பந்தம்:பிரதமர் மோடி ராஜிநாமா கோரி 27-ஆம் தேதி காங்கிரஸ் பேரணி

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ரபேல் ஒப்பந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரி வரும் 27-ஆம் தேதி மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சி மும்பையில் பேரணி செல்லவுள்ளது.

மும்பையில் செய்தியாளர்களிடம் அந்த மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அசோக் சவாண் இதுபற்றி கூறியதாவது: தேசத்தின் நலனைக் காட்டிலும், தொழிலதிபர்களாக உள்ள சில நண்பர்களின் நலனில் பிரதமர் மோடி அதிக அக்கறை செலுத்தி வருகிறார். ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது.
தேசப் பாதுகாப்புக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மக்களை இந்த விவகாரத்தில் தவறாக வழிநடத்தி வருகின்றனர்.இரு தலைவர்களும் தங்களது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 27-ஆம் தேதி மும்பையில் பேரணி செல்ல முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து