முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சண்டிகரில் இன்று 4 மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த 4 மாநில நிதி அமைச்சர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை கடந்த ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து கச்சா எண்ணெய் விலை, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் கடந்த 50 தினங்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகிறது.இந்நிலையில் உத்தரப்பிரதேசம், டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் இன்று சண்டிகரில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான வாட் வரியை குறைக்க முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து