எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல்,- கொள்ளை அடித்த பணத்தை வைத்து பதவியை பிடித்து விடலாம் என தினகரன் நினைக்கிறார். பணம் இருப்பவர்கள் எல்லாம் பதவியில் அமர முடியாது மக்களுக்காக உழைப்பவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும் என தினகரனுக்கு சாட்டையடி கொடுத்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.
திண்டு;க்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 110வது பிறந்தநாள் விழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துரோகம் இழைக்கப்பட்டதைக் கண்டித்தும் ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட கழக செயலாளரும் திண்டுக்கல் மாநகராட்சி முதல் மேயருமான வி.மருதராஜ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் வாரியத் தலைவருமான பி.பாலசுப்பிரமணி அனைவரையும் வரவேற்றார். நகர கழக செயலாளர் உதயம் ஏ.ராமசாமி. தொப்பம்பட்டி ஒன்றிய கழக செயலாளர் கிட்டுச்சாமி முன்னிலை வகித்தனர். கழக அமைப்பு செயலாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக அமைப்பு செயலாளரும் மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக அமைப்பு செயலாளரும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.விசுவநாதன், கழக செய்தி தொடர்பாளரும் கலை இலக்கிய பிரிவு தலைவருமான லியாகத் அலிகான், மாவட்ட கழக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.உதயகுமார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பி பரமசிவம், தலைமைக் கழக பேச்சாளர்கள் எம்.கோபி காளிதாஸ், நடிகர்
ஏ.கே.ராஜேந்திரன். என். முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பேசினர்.
கழக அமைப்பு செயலாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்புரையாற்றுகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நம்மை ஆளாக்கிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை மாநிலம் முழுவதும் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நாகர்கோவிலில் நடைபெற்றது. வருகிற 30ம் தேதி கடைசியாக சென்னையில் விழா எடுக்கிறார்கள். புரட்சி தலைவரின் புகழை முதல்வரும், துணை முதல்வரும் பரப்பி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தானும் கூட்டம் நடத்துகிறேன் என தினகரன் மேலூரில் கூட்டம் நடத்தினார். அதற்கு பிறகு ஏதாவது கூட்டம் நடத்துவார் என்று பார்த்தால் மன்னார்குடியில் கூட்டம் நடத்தினார். அதில் தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும். அதுபோல் 50 ஆயிரம் அடி தாண்டுவேன், 60 ஆயிரம் அடி தாண்டுவேன் என தன்னைத் தானே உயர்த்தி பேசி உள்ளார். 2001ல் நான் நினைத்திருந்தால் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராக ஆகி இருப்பேன் எனவும் கூறி உள்ளார். எனது வீட்டில் டிரைவர் உள்ளார். வேலை ஆட்கள் உள்ளனர். பல நண்பர்கள் உள்ளனர். அத்தனை பேரும் எனது சொத்துக்கோ அல்லது எனது உடமைக்கோ உரிமை கோரினால் எவ்வளவு கேவலமோ அதைவிட கேவலமாக அங்கே பாதுகாப்புக்காக அல்லது வேறு உதவிகளுக்காக சென்ற அந்த குடும்பத்தை சேர்ந்த தினகரன் இன்று எங்களுக்கு ஆட்சி அமைக்க உரிமை இருக்கிறது முதல் அமைச்சர் பதவியை நாங்கள் ஏற்றிருப்போம். நாங்களாகவே விட்டுக் கொடுத்துள்ளோம். என்று பேசி உள்ளார். இது கேப்பையிலே நெய் வடிகிறது என்றால் அதை கேட்பவர்களுக்கு எங்கே போனது எங்கே போனது புத்தி?
மாநிலம் முழுவதும் வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்து ஆட்களை திரட்டி தினகரன் ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடத்தினார். ஆனால் இன்று கழகம் ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மட்டுமே தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இங்குள்ள வணிக பெருமக்கள், தாய்மார்கள் இன்று நடைபெறுகின்ற கூட்டம் எழுச்சி போல அவர்கள் கூட்டத்தில் இருந்ததா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஜெயிலுக்கு போனேன் ஜெயிலுக்கு போனேன் என்று நடிகர் வடிவேலு போல கூறி வருகிறார். எதற்காக நீங்கள் ஜெயிலுக்கு போனீர்கள்? காபிபோசா சட்டத்தில் கைது செய்து சிறை சென்ற குற்றவாளி தானே தினகரன். ஆனால் அவர் மகாத்மா காந்தியின் உத்தம பேரன் போல் கழக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக கூறி வருகிறார். அன்றைய தினம் லண்டன் வழக்கில் கருணாநிதியிடம் பிச்சை எடுத்து அவரை மட்டும் விடுவித்து அம்மாவை பொய் வழக்கில் காட்டி கொடுத்த துரோகி தான் தினகரன். அவரை நம்பி சென்ற நமது நண்பர்கள் மீண்டும் நமது கழகத்தில் இணைய வேண்டும்.
அம்மாவை கொலை செய்தவர்கள் தான் இன்று ஆட்சியை கைப்பற்ற துடிக்கின்றனர். தினகரன். திவாகரன். பாஸ்கரன் என அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் கொள்ளை அடித்த பணத்தை வைத்து பதவியை பிடித்து விடலாம் என நினைக்கின்றனர். பணம் இருப்பவர்கள் தான் முதல் அமைச்சராக, பிரதமராக, ஜனாதிபதியாக வர முடியும் என்றால் டி.வி.எஸ் ஐயங்கார். டாடா பிர்லா, அம்பானி ஆகியோர் தான் பதவியில் இருந்திருக்க வேண்டும். பணம் இருப்பவர்களால் மட்டுமே பதவிக்கு வந்து விட முடியாது. மக்களுக்காக உழைப்பவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும். அவ்வாறு உழைத்ததால் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 3 முறையும். அம்மா 6 முறையும் முதல்வராக பதவி வகித்தனர். 37 எம்.பிக்களையும் அம்மா பெற்று தந்தார்.
வரவிருக்கின்ற திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் மறைந்த போஸ் 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தற்போது 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கழகம் வெற்றி பெறும். திருவாரூரிலும் கழகமே மகத்தான வெற்றி பெறும். இவ்வெற்றிக்கு பிறகு தினகரன் கட்சியில் உள்ள தம்பிமார்கள் நமது கழகத்தில் வந்து இணைய வேண்டும். புரட்சி தலைவி அம்மாவின் கனவை நிறைவேற்றுவோம்.
மு.க.ஸ்டாலின் நமது ஆட்சியில் ஊழல் நடந்து வருவதாக ஊடகங்களில் கூறி வருகிறார். நமது அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் அவருக்கு தெளிவாக பதில் அளித்துள்ளனர். வழக்கு போடுங்கள். அதனை சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்று பெறுவோம். நாங்கள் குற்றவாளி என்றால் பதவியை ராஜினாமா செய்ய தயார் என ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். 2016ம் ஆண்டில் ஸ்டாலின் பேண்ட் சர்ட் போட்டு பிரச்சாரம் செய்தார். ஆனால் அம்மா தான் மகத்தான வெற்றியை பெற்றார். கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் கொடுக்க வில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளை மெரீனாவில் அடக்கம் செய்வதற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட போது அவர் முன்னாள் முதல்வர்களுக்கு இடம் கிடையாது என கூறியதை ஸ்டாலினிடம் தெரிவித்தோம்.மெரீனாவில் அடக்கம் செய்வது தொடர்பாக வழக்கும் உள்ளது. எனவும் தெரிவித்தோம். ஒரே நாளில் அவர்கள் போட்ட வழக்கை வாபஸ் பெற வைத்தவர்கள் தான் நம்முடைய முதல்வரும். துணை முதல்வரும். அ.தி.மு.கழகத்தை அழிக்க பார்த்த கருணாநிதியாலேயே முடியவில்லை. அவரது மகன் ஸ்டாலினால் தானா முடியப் போகிறது.?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மிக சிறப்பான முறையில் ஆட்சி புரிந்து வருகின்றனர். காவிரி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் அம்மாவின் வழியில் கையாண்டு மகத்தான வெற்றியை பெற்று தந்துள்ளனர். கழகத்தையோ ஆட்சியையோ எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. அம்மா வழியில் நடைபெறும் கழக ஆட்சிக்கு தமிழக மக்கள் என்றென்றும் துணை நிற்க வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் நத்தம் தொகுதி முன்னாள் செயலாளர் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் குப்புசாமி, ஏ.டி.செல்லசாமி, கே.எஸ்.என்.வேணுகோபாலு, தென்னம்பட்டி பழனிசாமி, பிரேம்குமார். சுப்புரத்தினம், ஒன்றிய கழக செயலாளர்கள் ஆத்தூர் பி.கே.டி நடராஜன், ரெட்டியார்சத்திரம் ராஜ்மோகன், நத்தம் ஷாஜகான். சாணார்பட்டி ராமராசு, பழனி முத்துசாமி, குஜிலியம்பாறை மலர்வண்ணன், வடமதுரை லட்சுமணன், நிலக்கோட்டை யாகப்பன், வத்தலக்குண்டு பாண்டியன். திண்டுக்கல் ஜெயசீலன், கொடைக்கானல் மேல்மலை முருகன், நகர செயலாளர்கள் கொடைக்கானல் ஸ்ரீதர். பழனி முருகானந்தம், சார்பு அணி நிர்வாகிகள் திவான்பாட்சா, பாரதிமுருகன், ஜெயபாலன், வி.டி.ராஜன், வளர்மதி, அன்வர்தீன், ஜெயராமன், அகரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல். வத்தலக்குண்டு பீர் முகமது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.