முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை கலெக்டர் நடராஜன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

   மதுரை,-மதுரை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன்,  தலைமையில்   நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட ஆட்சித்தலைவர்  மனுக்களை அளித்தனர்.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக் கோரியது, சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் நிலம் தொடர்பான 1050 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 05 மனுக்களும்,  முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகை தொடர்பான 80 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 12 மனுக்களும், அடிப்படை வசதிகள், தெருவிளக்கு, தண்ணீர் குழாய், பஸ் வசதி தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரியது தொடர்பான 40 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 17, கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரிய 15 மனுவும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சலவைப் பெட்டி தொடர்பான 13 மனுக்களும்;, ஓய்வூதியம் நிலுவைத்தொகை, ஓய்வூதிய பலன்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பான 15 மனுக்களும் மற்றும் இதர 306 மனுக்களும் என மொத்தம் 1553 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
  இக்கூட்டத்தில் சமூகபாதுகாப்பு திட்டத்தின்கீPழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை 8 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூபாய்.4,170 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் 14 நபர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர்   வழங்கினார்.
     இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ரெ.குணாளன்  ,   உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து