முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அமைச்சரவை பரிந்துரை எதிரொலி:சென்னையில் கவர்னருடன் அற்புதம்மாள் சந்திப்பு மகன் பேரறிவாளன் விடுதலை கோரி மனு

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

பேரசென்னை,ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யக்கோரி அண்மையில் தமிழக அமைச்சரவை கவர்னருக்கு செய்த பரிந்துரையை அடுத்து, சென்னையில் நேற்று கவர்னருடன் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். அப்போது மகன் பேரறிவாளன் விடுதலை குறித்து மனு ஒன்றை வழங்கினார்.

பரிந்துரைத்து தீர்மானம்.....ராஜீவ் காந்தி கொலை கைதிகள் பேரறிவாளன் உட்பட 7 பேர்  விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினமே அந்த பரிந்துரை கவர்னருக்கு அனுப்பப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.

விடுதலைக்கு எதிர்ப்பு.....இந்தப் பரிந்துரை தொடர்பாக கவர்னர் மத்திய அரசின் கருத்தைக் கேட்டுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவ்வாறு மத்திய அரசிடம் எந்தவித கருத்தையும் கேட்கவில்லை என கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும், இதுகுறித்து வெளிப்படையான, தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, ராஜீவ் காந்தி படுகொலையின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

கவர்னருடன் சந்திப்பு.....இந்நிலையில், தன் மகனை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து மனு அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அற்புதம்மாள் கூறியதாவது,
7 பேர் விடுதலையைப் பரிந்துரைத்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. எழுவர் விடுதலை கவர்னர் கையெழுத்தால் தான் தாமதிக்கப்படுகிறது. கவர்னர் என் மனுவை படித்துப் பார்த்தார். அந்த மனுவில், என் மகனுக்கு எப்படி பரோல் கிடைத்தது, மேலும் பரோல் நீட்டிப்பு எதனால் கிடைத்தது என்பது குறித்து குறிப்பிட்டிருக்கிறேன். மேலும், தீர்ப்பில் குளறுபடிகள் இருப்பதாக கூறிய நீதிபதி கே.பி.தாமஸின் கருத்து, மறைந்த நீதிபதி கிருஷ்ணய்யர் வலியுறுத்திய புத்தகம் மற்றும் சிடி உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் உறுதியளித்துள்ளார்.

வாய்ப்பே இல்லை... கவர்னர் மாளிகையில் அதிகப்படியாகப் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை. மனுவில் இருந்த திருத்தம் ஒன்றை கவர்னர் சொன்னார். அதனை நான் திருத்தினேன். தமிழக அரசின் தீர்மானத்தில் கையெழுத்திட்டு விரைவில் என் மகன் விடுதலையாவான் என்ற நம்பிக்கையுள்ளது. சுப்ரீம் கோர்ட், அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் மரியாதையளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எழுவர் விடுதலையில் இழப்பீட்டை எதிர்பார்த்து தான் எதிர்ப்பு கிளம்புகிறது. உயிருடன் சித்ரவதை அனுபவிக்கும் எனக்கும், என் மகனுக்கு என்ன இழப்பீடு வழங்கப்படும்?. இவ்வாறு அற்புதம்மாள் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து