எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துபாய்,ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஷிகர் தவான், ரோகித் சர்மா சதம் அடித்தனர். இந்த வெற்றி மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்தது.
மீண்டும் மோதல்....14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் சோகைல், உஸ்மான் கான் ஆகியோருக்கு பதிலாக முகமது அமிர், ஷதப்கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
பாக். பேட்டிங் தேர்வு.....‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் ஆகியோர் களம் இறங்கினார்கள். புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தங்களது வேகப்பந்து வீச்சு தாக்குதலை நேர்த்தியாக தொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடித்து ஆட சிரமப்பட்டனர்.
ரோகித் சர்மா அப்பீல்........8-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச அழைக்கப்பட்டார். அதற்கு உடனடியாக நல்ல பலன் கிடைத்தது. அவரது அந்த ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல்-ஹக் (10 ரன், 20 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால் நடுவர் எல்.பி.டபிள்யூ. கொடுக்க மறுத்ததால் நடுவரின் முடிவை எதிர்த்து கேப்டன் ரோகித் சர்மா அப்பீல் செய்தார். இதில் இந்திய அணியின் அப்பீல் வெற்றியில் முடிந்தது. இமாம் உல்-ஹக் அவுட் என்று அறிவிக்கப்பட்டு வெளியேறினார்.
குல்தீப் யாதவ்............அடுத்து பாபர் அசாம் களம் இறங்கினார். 13-வது ஓவரில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் பஹார் ஜமான் முதல் சிக்சரை பறக்கவிட்டு அசத்தினார். ஆனால் குல்தீப் யாதவின் அடுத்த ஓவரில் பஹார் ஜமான் (31 ரன்கள், 44 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்) முன்னால் இறங்கி தரையில் முட்டி போட்ட நிலையில் பந்தை அடிக்க முற்பட்டு நிலை தடுமாறி விழுந்ததுடன் எ.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டையும் இழந்து நடையை கட்டினார்.
பாக். தடுமாற்றம்.....இதைத்தொடர்ந்து கேப்டன் சர்ப்ராஸ் அகமது, பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்தார். ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஒரு ரன் எடுப்பதற்கு ஓட முயற்சித்த சர்ப்ராஸ் அகமது, திடீரென எதிர்முனையில் இருந்த பாபர் அசாமை திரும்பி விடும்படி சைகை செய்தார். ஆனால் அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கொண்ட யுஸ்வேந்திர சாஹல் துரிதமாக செயல்பட்டு பாபர் அசாமை (9 ரன்) ரன்-அவுட் செய்தார். அப்போது பாகிஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்து தடுமாறியது.
சோயிப் மாலிக்...இதனை அடுத்து சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமதுவுடன் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பாகிஸ்தான் அணி 27.1 ஓவர்களில் 100 ரன்னை எட்டியது. அடித்து ஆடிய சோயிப் மாலிக் 64 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதத்தை கடந்தார். இந்த போட்டி தொடரில் சோயிப் மாலிக் அடித்த 2-வது அரைசதம் இதுவாகும். அணியின் ஸ்கோர் 38.5 ஓவர்களில் 165 ரன்னாக உயர்ந்த போது சர்ப்ராஸ் அகமது (44 ரன்கள், 66 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு சர்ப்ராஸ் அகமது-சோயிப் மாலிக் ஜோடி 107 ரன்கள் திரட்டியது.
237 ரன்கள்...அடுத்து ஆசிப் அலி, சோயிப் மாலிக்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினார்கள். 42-வது ஓவரில் புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் ஆசிப் அலி 2 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். சோயிப் மாலிக் ஒரு பவுண்டரி விரட்டினார். அந்த ஓவரில் மட்டும் 22 ரன்களை புவனேஷ்வர்குமார் விட்டுக்கொடுத்தார். 43.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 200 ரன்களை கடந்தது. நிலைத்து நின்று ஆடிய சோயிப் மாலிக் 90 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆடிய ஆசிப் அலி (30 ரன்கள், 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன்) யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சிலும், ஷதப் கான் (10 ரன்) ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சிலும் அடுத்தடுத்து கிளன் போல்டு ஆகி ஆட்டம் இழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. முகமது நவாஸ் 15 ரன்னுடனும், ஹசன் அலி 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
238 ரன்கள் இலக்கு...பின்னர் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 15-வது சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 100 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 114 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார். இந்த போட்டி தொடரில் அவர் அடித்த 2-வது சதம் இதுவாகும். கேப்டன் ரோகித் சர்மா 111 ரன்னுடனும் (119 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன்), அம்பத்தி ராயுடு 12 ரன்னுடனும் (18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) களத்தில் இருந்தனர். 19-வது சதத்தை பூர்த்தி செய்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களையும் கடந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் 2 இந்திய வீரர்கள் சதம் அடிப்பது இது 3-வது நிகழ்வாகும். ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இறுதிப்போட்டிக்கு...சூப்பர்-4 சுற்றில் தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்த இந்திய அணி ஏறக்குறைய இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அத்துடன் பாகிஸ்தான் அணியை மீண்டும் வீழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று இருந்தது. போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இந்திய அணி தனது கடைசி ‘சூப்பர்-4’ சுற்று ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 6 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 7 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
கிலோ கணக்கில் தங்கம் கடத்தல்: நேபாளத்தில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது
18 Mar 2024காத்மண்டு : தங்கம் கடத்தல் விவகாரத்தில் நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இளவரசி கேத் மிடில்டனின் உடல்நிலை பற்றி பரவும் தகவல் : டுவிட்டர் நிறுவனம் விளக்கம்
18 Mar 2024லண்டன் : இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனின் உடல்நிலை குறித்து பரவும் தகவலுக்கு டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.