முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனந்தா புஷ்கர் மர்ம மரணம்: அக். 9ல் இறுதி விசாரணை

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2104-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் தரப்பில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சசி தரூருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் என டெல்லி பெருநகர நீதிமன்றம் தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து