முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் விசயத்தில் உண்மைகளை மக்களிடம் எடுத்துரைப்போம்: நிர்மலா சீதாராமன்

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், காங்கிரஸின் பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் நாடு முழுவதும் சென்று மக்களிடம் உண்மைகளை எடுத்துரைப்போம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நானும், இதர அமைச்சர்களும் நாடு முழுவதும் சென்று, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை மக்களிடத்தில் எடுத்துரைப்போம். இந்த விவகாரத்தில் கருத்துரீதியிலான போரை மத்திய அரசு முன்னெடுக்கும் என்றார்.மேலும், பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் திறனை மோடி தலைமையிலான மத்திய அரசு குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான பணிகள் அளிக்கப்பட்டன. ஆனால், தற்போதோ ஆண்டுக்கு ரூ.22,000 கோடி மதிப்பிலான பணிகள் அளிக்கப்படுகின்றன என்றார் நிர்மலா சீதாராமன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து