முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் மிதமான நிலநடுக்கம்

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி, அசாமில் நேற்று காலை மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியது.

இதுகுறித்து ஏ.என்.ஏ. வெளியிட்ட செய்தியில் "அசாமின் பர்பேடா மாவட்டத்தில்  செவ்வாய்க்கிழமை காலை 9. 17 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4. 7 ஆக பதிவாகியது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் கவுகாத்தி மற்றும் அசாமின் பிற பகுதிகளிலும், பிற வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் உணரரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து