முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாஸை காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு:இன்றைக்கு ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,கருணாஸை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய போலீசின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸாருக்கு மிரட்டல் விடுக்கும் விதமாகப் பேசியதாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில்  அடைக்கப்பட்டார். தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அவர் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலையே வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் கருணாஸை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து