எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : தி.மு.க.வில் குடும்பச் சண்டைதான் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. கட்சியே அல்ல, அது ஒரு கம்பெனி என்று சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன பொதுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசினார்.
தமிழகம் முழுவதும்...
ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான தி.மு.க. - காங்கிரஸ் கட்சியினரின் போர்க்குற்றத்தை விசாரணைக்கு உட்படுத்தி அவர்களை தண்டிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டனம் கூட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது. அதன் படி நேற்று தமிழகம் முழுவதும் கண்டன கூட்டங்கள் நடைபெற்றன. சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கண்டன கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்கள்.
சேலத்தில் நேற்று நடந்த கண்டன கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
கருணாநிதியும் - ஸ்டாலினும்...
ஈழத் தமிழர்களுக்காக தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார். உண்ணாவிரதத்தின் முடிவில் மத்திய அரசு வாக்குறுதி தந்ததாக சொல்லி தனது உண்ணாவிரதத்தை முடித்தார். அவரது பேச்சை நம்பி இலங்கையில் பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த ஈழத் தமிழர்கள் வெளியே வந்தார்கள். அதை பயன்படுத்திக் கொண்ட ராஜபக்சே குண்டுமழை பொழிந்து நமது இன மக்களை கொன்று குவித்தார். அதற்கு துணை போனவர்கள் கருணாநிதியும்,
ஸ்டாலினும்.
போர்க்குற்றம் செய்தவர்...
இதையெல்லாம் இவ்வளவு காலம் தாழ்த்தி ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே சமீபத்தில் அளித்த பேட்டியின் மூலம்தான் இந்திய ராணுவம் அவர்களுக்கு உதவிய விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அதில் தி.மு.க. அங்கம் வகித்தது. ஆக ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விஷயத்தில் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் ஆகியோர்தான் போர்க்குற்றம் செய்தவர்கள். இந்த விஷயத்தை மத்திய அரசு மற்றும் சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்லத்தான் தமிழகம் முழுவதும் இந்த கண்டனக் கூட்டங்கள் நடக்கின்றன.
முகத்திரையை கிழிக்கவே...
தமிழினத்தை படுகொலை செய்தவர்கள் இந்த தி.மு.க.வினர். வெட்கமில்லாமல் இன்று நடமாடுகிறார்கள். அவர்களது முகத்திரையை கிழிக்கவே இந்த கூட்டம் இங்கு நடக்கிறது. தி.மு.க.-காங்கிரஸ் கும்பல் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை. அண்மையில் ஸ்டாலின் இங்கு வந்தார். அ.தி.மு.க. அரசு ஏதோ தவறு செய்துவிட்டது போல பேசிவிட்டு சென்றார். ஒரு பொய்யை அடிக்கடி சொன்னால் உண்மையாகிவிடும் என்று அவர் நினைக்கிறார்.
மதிக்கக்கூடிய இயக்கம்
செயல்படாத தலைவராக இருந்த அவர் தற்போது தி.மு.க.வின் தலைவராகிவிட்டார். ஆனால் அங்கு குடும்பச் சண்டைதான் நடக்கிறது. தி.மு.க. ஒரு கட்சியே அல்ல, அது ஒரு கம்பெனி. அங்கே வாரிசுகளுக்குத்தான் பதவி கிடைக்கும். திண்டுக்கல்லில் பெரியசாமிக்கு பிறகு அவரது பையன் பழனி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பிறகு அவரது மகன் முக்கிய பதவியில் இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் மிட்டா மிராசுகள் அல்ல, தொழில் அதிபர்களும் அல்ல, இங்கு யார் வேண்டுமானலும் பதவிக்கு வரலாம். உழைக்கக் கூடியவர்களை மதிக்கக்கூடிய இயக்கம் அ.தி.மு.க. நாங்கள் பதவிக்கு வந்ததில் உனக்கு ஏன் பொறாமை? உனக்கு பிராப்தம் இல்லை.
ஒழிக்கப் பார்கிறார்கள்...
எங்கள் தலைவி கஷ்டப்பட்டு கரடுமுரடான பாதையை கடந்து முதல்வர் பதவிக்கு வந்தார். அவரையும் விட்டு வைத்தீர்களா? லாரி மோதி கொல்லப்பார்த்தீர்கள். எம்.ஜி.ஆரையும் ஒழிக்கப் பார்த்தீர்கள். சட்டசபையில் அவரது மைக்கை பறித்தீர்கள். அப்போது சவால் விட்டு சென்றவர் முதல்வராக திரும்பி வந்தார். அம்மாவையும் சட்டசபையில் தாக்கினீர்கள். பெண் என்றும் கூட பாராமல் சேலையை பிடித்து இழுத்தீர்கள். ஆனால் பொறுமையை கடைபிடித்த அம்மா தமது சபதத்தின் அடிப்படையில் முதல்வராக சட்டசபையில் நுழைந்தார். ஆக எம்.ஜி.ஆர். மற்றும் அம்மாவை ஒழிக்க நினைத்தவர்கள் இன்று நம்மையும் ஒழிக்கப் பார்கிறார்கள். எத்தனை நெருக்கடி தந்தாலும் அது நடக்காது.
நாம் இரும்பு மனம் படைத்தவர்கள். தைரியம் நமக்கு உண்டு. அச்சம் என்பது கிடையாது. உழைக்க வந்த கூட்டம் இது. பதவி வெறிபிடித்தவர்கள் அல்ல நாங்கள். ஸ்டாலின் எப்போதும் கனவு காண்கிறார். அவரால் கனவுதான் காண முடியும். ஒருநாளும் அவரால் முதல்வராக முடியாது. அடிக்கடி லண்டன் போய்விடுகிறார். அப்பாவின் தோளில் ஏறி பதவிக்கு வந்தவர். ஆனால், நாங்கள் அப்படி அல்ல. கிளை செயலாளராக, மாவட்ட செயலாளராக, மந்திரியாக இப்படி படிப்படியாக வந்தவர்கள் நாங்கள்.
குடும்ப ஆட்சி இல்லை
எங்களது விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு. இது உயிரோட்டமுள்ள இயக்கம். மக்கள்தான் எங்களுக்கு குடும்பம். உங்களைப் போல் குடும்ப ஆட்சி நடத்தவில்லை. முதலில் கருணாநிதி பிறகு ஸ்டாலின், இப்போது அவரது மகன் உதயநிதியும் வந்துவிட்டார். ஆட்சியை கவிழ்க்க துடித்தீர்கள் முடியவில்லை. இப்போது ஊழல் ஊழல் என்கிறீர்கள். நீங்கள் எதை சொன்னாலும் எடுபடாது. தமிழகம் முழுவதும் பல பாலங்களை கட்டிக் கொடுத்திருக்கிறோம். பல சாதனைகளை செய்திருக்கிறோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
மதுரையில் கண்டன....
இதேபோல் தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. மதுரையில் மாநகர மாவட்ட அ.தி.மு.க., புறநகர் மாவட்ட அ.தி.மு.க. இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினர். ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டன உரை ஆற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.