முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையம் பகுதி பொதுமக்களின் நூற்றாண்டு கனவை நனவாக்கிய தமிழக அரசு| அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பெருமிதம்|

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

இராஜபாளையம் - விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதி பொதுமக்களின் நூற்றாண்டு கால கனவை நனவாக்கும் வகையில் புதிய இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படவிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இராஜபாளையம்- சத்திரப்பட்டி சாலையில் புதிய இரயில்வே மேம்பாலத்துக்கான பூமிபூஜையை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமையில் அவர் துவக்கி வைத்தார்.
              இவ்விழாவில் அவர் பேசியதாவது, “ விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரம் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இந்த நகரின் கிழக்குப் பகுதியில் எண்ணற்ற நூற்பாலைகளும், மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் துணிகளை நெய்யும் ஆலைகளும் மிக அதிக அளவில் உள்ளது. கிழக்குப் பகுதியில் இருந்து இராஜபாளையம் நகருக்கும், நகரில் இருந்து சத்திரப்பட்டி, கீழராஜகுலராமன், ஆலங்குளம், வெம்பக்கோட்டை போன்ற இடங்களுக்கும் தினசரி 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணிநிமித்தமாக சென்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் பத்மா மருத்துவமனை அருகே உள்ள இரயில்வே கிராசிங்கைத் தாண்டித் தான் வேலைக்குச் சென்று வருகின்றனர். ஒவ்வொரு முறையும் இந்த வழியாக ரயில்கள் வந்து செல்லும் போது அடிக்கடி ரயில்வே கேட்களை அடைப்பதால் பொதுமக்கள் சொல்லமுடியாத துன்பத்துக்கு ஆளாகி வந்தனர்.
              இந்த இடத்தில் புதிய இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அரசுக்கு கோரிக்கைகளை விடுத்து வந்தனர். கடந்த 2011  ஆம் ஆண்டு தமிழக முதல்வராக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொறுப்பேற்றவுடன் நான் இந்த மேம்பாலம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அம்மா அவர்களிடம் விளக்கிக் கூறினேன். உடனடியாக ஆவன செய்வதாகக் கூறிய அவர் அதற்கான அடிப்படை ஆய்வுப்பணிகளை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தற்போது அம்மா அவர்களது வழியில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திக் கொடிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் இந்த மேம்பாலம் அமைக்க ரூ 42  கோடியை ஒதுக்கீடு செய்துள்ளனர். தற்போது இந்த பணிகளை நாங்கள் துவங்கி வைக்கின்ற இந்த நேரத்தில் இப்பகுதி மக்களின் ஒரு நூற்றாண்டு கால கனவை நனவாக்கியுள்ளோம் என்பதில் பெருமிதமடைகின்றோம்.
                   இந்த மாவட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும அம்மாவின் அரசு செய்து வருகின்றது. தாமிரபரணி ஆற்றில் மானூரில் இருந்து சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்ட்த்தை அம்மாவின் அரசு நிறைவேற்றித் தந்தது. சீவலப்பேரி, வல்லநாடு போன்ற இடங்களில் இருந்து விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் போன்ற நகராட்சிகளுக்கு குடிநீர் திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர், இராஜபாளையம் நகராட்சிகள் முதலில் நிறைவேற்றப்பட்ட திட்ட்த்தில் விடுபட்டுப் போயிருந்த காரணத்தால் அந்த இரண்டு நகராட்சிகளுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சிக்கு வைகை ஆற்றில் இருந்து திருப்புவனம்- அருப்புக்கோட்டை குடிநீர் திட்டம் தான் முதலில் செயல்படுத்தப்பட்ட திட்டமாகும்., இந்த்த் திட்ட்த்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்த காரணத்தால் அங்கு புதிய குழாய்கள மைத்து குடிநீர் கொண்டுவரும் பணிகளை அம்மாவின் அரசு மிகத்தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றது.
                     பொதுமக்களின் குடிநீர்த்தேவைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அந்த அளவுக்கு பொதுசுகாதாரத்தைப் பேணிக்காக்கும் பணிகளில் அம்மாவின் அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றது. இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு புதிய ஸ்கேன் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் இருக்கும் அனைத்து பரிசோதனைக் கருவிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. கிராம்ப்புற மக்கள் பயன்பெறுகின்ற வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் நவீன மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அம்மாவின் அரசுக்குப் பொதுமக்கள் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.
                        விழாவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.சந்திரபிரபாமுத்தையா, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பி.பி.செல்வசுப்பிரமணியராஜா,  நகரச்செயலாளர் என்.பாஸ்கரன், ஒன்றியச் செயலாளர்கள் புதுப்பட்டி வி.ஆர்.கருப்பசாமி[சிவகாசி]  ஆர்.எம்.குருசாமி[இராஜபாளையம் மேற்கு] கே.கே.வேல்முருகன்[இராஜபாளையம் கிழக்கு] எஸ்.கே.மயில்சாமி [ஸ்ரீவில்லிப்புத்தூர்] எதிர்கோட்டை ஆர்.ஆர்.மணிகண்டன் [வெம்பக்கோட்டை கிழக்கு] எஸ்.இராமராஜ்[ வெம்பக்கோட்டை மேற்கு] முன்னாள் மாவட்டச் செயலாளர் இரா.விநாயகமூர்த்தி, நகர் அம்மா பேரவை செயலாளர் ஏ.டி.முருகேசன், பூபதிராஜூ கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.ராதாகிருஷ்ணராஜா, மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன், ஸ்ரீவில்லிப்புத்தூர் அக்ரோசர்வீஸ் தலைவர் கருமாரி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து