எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இராஜபாளையம் - விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதி பொதுமக்களின் நூற்றாண்டு கால கனவை நனவாக்கும் வகையில் புதிய இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படவிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இராஜபாளையம்- சத்திரப்பட்டி சாலையில் புதிய இரயில்வே மேம்பாலத்துக்கான பூமிபூஜையை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமையில் அவர் துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் அவர் பேசியதாவது, “ விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரம் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இந்த நகரின் கிழக்குப் பகுதியில் எண்ணற்ற நூற்பாலைகளும், மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் துணிகளை நெய்யும் ஆலைகளும் மிக அதிக அளவில் உள்ளது. கிழக்குப் பகுதியில் இருந்து இராஜபாளையம் நகருக்கும், நகரில் இருந்து சத்திரப்பட்டி, கீழராஜகுலராமன், ஆலங்குளம், வெம்பக்கோட்டை போன்ற இடங்களுக்கும் தினசரி 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணிநிமித்தமாக சென்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் பத்மா மருத்துவமனை அருகே உள்ள இரயில்வே கிராசிங்கைத் தாண்டித் தான் வேலைக்குச் சென்று வருகின்றனர். ஒவ்வொரு முறையும் இந்த வழியாக ரயில்கள் வந்து செல்லும் போது அடிக்கடி ரயில்வே கேட்களை அடைப்பதால் பொதுமக்கள் சொல்லமுடியாத துன்பத்துக்கு ஆளாகி வந்தனர்.
இந்த இடத்தில் புதிய இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அரசுக்கு கோரிக்கைகளை விடுத்து வந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொறுப்பேற்றவுடன் நான் இந்த மேம்பாலம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அம்மா அவர்களிடம் விளக்கிக் கூறினேன். உடனடியாக ஆவன செய்வதாகக் கூறிய அவர் அதற்கான அடிப்படை ஆய்வுப்பணிகளை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தற்போது அம்மா அவர்களது வழியில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திக் கொடிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் இந்த மேம்பாலம் அமைக்க ரூ 42 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளனர். தற்போது இந்த பணிகளை நாங்கள் துவங்கி வைக்கின்ற இந்த நேரத்தில் இப்பகுதி மக்களின் ஒரு நூற்றாண்டு கால கனவை நனவாக்கியுள்ளோம் என்பதில் பெருமிதமடைகின்றோம்.
இந்த மாவட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும அம்மாவின் அரசு செய்து வருகின்றது. தாமிரபரணி ஆற்றில் மானூரில் இருந்து சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்ட்த்தை அம்மாவின் அரசு நிறைவேற்றித் தந்தது. சீவலப்பேரி, வல்லநாடு போன்ற இடங்களில் இருந்து விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் போன்ற நகராட்சிகளுக்கு குடிநீர் திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர், இராஜபாளையம் நகராட்சிகள் முதலில் நிறைவேற்றப்பட்ட திட்ட்த்தில் விடுபட்டுப் போயிருந்த காரணத்தால் அந்த இரண்டு நகராட்சிகளுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சிக்கு வைகை ஆற்றில் இருந்து திருப்புவனம்- அருப்புக்கோட்டை குடிநீர் திட்டம் தான் முதலில் செயல்படுத்தப்பட்ட திட்டமாகும்., இந்த்த் திட்ட்த்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்த காரணத்தால் அங்கு புதிய குழாய்கள மைத்து குடிநீர் கொண்டுவரும் பணிகளை அம்மாவின் அரசு மிகத்தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றது.
பொதுமக்களின் குடிநீர்த்தேவைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அந்த அளவுக்கு பொதுசுகாதாரத்தைப் பேணிக்காக்கும் பணிகளில் அம்மாவின் அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றது. இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு புதிய ஸ்கேன் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் இருக்கும் அனைத்து பரிசோதனைக் கருவிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. கிராம்ப்புற மக்கள் பயன்பெறுகின்ற வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் நவீன மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அம்மாவின் அரசுக்குப் பொதுமக்கள் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.சந்திரபிரபாமுத்தையா, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பி.பி.செல்வசுப்பிரமணியராஜா, நகரச்செயலாளர் என்.பாஸ்கரன், ஒன்றியச் செயலாளர்கள் புதுப்பட்டி வி.ஆர்.கருப்பசாமி[சிவகாசி] ஆர்.எம்.குருசாமி[இராஜபாளையம் மேற்கு] கே.கே.வேல்முருகன்[இராஜபாளையம் கிழக்கு] எஸ்.கே.மயில்சாமி [ஸ்ரீவில்லிப்புத்தூர்] எதிர்கோட்டை ஆர்.ஆர்.மணிகண்டன் [வெம்பக்கோட்டை கிழக்கு] எஸ்.இராமராஜ்[ வெம்பக்கோட்டை மேற்கு] முன்னாள் மாவட்டச் செயலாளர் இரா.விநாயகமூர்த்தி, நகர் அம்மா பேரவை செயலாளர் ஏ.டி.முருகேசன், பூபதிராஜூ கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.ராதாகிருஷ்ணராஜா, மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன், ஸ்ரீவில்லிப்புத்தூர் அக்ரோசர்வீஸ் தலைவர் கருமாரி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.