முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவிகளை காப்பாற்றி கொள்ள ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தது தி.மு.க.ராஜன்செல்லப்பா, எம்.எல்.ஏ. பேச்சு

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை, - தங்கள் பதவிகளை காப்பாற்றி கொள்ள ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தது தி.மு.க. என்று மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்துக்கு உதவி செய்த தி.மு.க – காங்கிரஸ் கட்சிகளை போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி மதுரை மாநகர், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன கூட்டம் மதுரை பழங்காநத்தம் நடராஜன் தியேட்டர் திடலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை வகித்து பேசினார். மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசியதாவது:–
ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்தது தி.மு.க. – காங்கிரஸ். ஆனால் ஈழத்தமிழர்களுக்காக உதவி செய்தது அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தார். உதவி செய்தார். இதே போல ஜெயலலிதாவும் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தார். தி.மு.க. தங்களின் பதவிகளை காப்பற்றி கொள்ள ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்தது. ஈழத்தமிழர்களை காட்டிக் கொடுத்தது. இதனால் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இதுமட்டுமல்லாமல் தமிழக மீனவர்களின் வாழ்வதாரமான கச்சத்தீவை தாரை வார்த்தார் கருணாநிதி. காவிரி பிரச்சினையிலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அக்கறை காட்டவில்லை. ஆனால் மக்கள் நலனுக்காக அ.தி.மு.க. என்றைக்கும் பாடுபட்டு வருகிறது. ஊழலை பற்றி மு.க.ஸ்டாலின் பேசுகிறார். ஊழலை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது. ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது தி.மு.க. ஆட்சி மட்டுமே. மக்கள் நலனுக்காக செயல்பட்டு வருவது அ.தி.மு.க. மட்டுமே. நூறு ஆண்டுகள் அ.தி.மு.க.வும், அம்மாவின் ஆட்சியும் இருக்கும்.
இவ்வாறு ராஜன்செல்லப்பா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து