முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகாத உறவு கிரிமினல் குற்றம் இல்லை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,தகாத உறவு கிரிமினல் குற்றம் இல்லை, 497-வது பிரிவு சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

பதில் மனு....கள்ளக் காதலில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுகிறது. அதுவே பெண்ணுக்கு எந்த தண்டனையும் இல்லை. எனவே, இந்திய தண்டனைச் சட்டம் 497-வது பிரிவை மாற்ற வேண்டும் என்று ஜோசப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்  மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு தற்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

497-வது பிரிவு....மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 11 பக்க பதில் மனுவில், கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவிக்கு எதிராக கணவர் புகார் கொடுத்தால் அவனது மனைவியுடன் பழகிய ஆணுக்கு மட்டுமே தண்டனை கொடுக்க முடியும். கணவன் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மனைவியால் புகார் கொடுக்க முடியாத நிலை உள்ளது. ஆண்- பெண் சமத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும் ஐ.பி.சி. 497-வது பிரிவை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், திருமணமான பெண்ணுடன்  வேறு ஒரு ஆண் பழகுவது உறுதி செய்யப்பட்டால் அந்த ஆணுக்கு மட்டும் அபராதத்துடன் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடியும். ஆனால் இதே குற்றத்தை செய்த பெண்ணுக்கு அந்த 5 ஆண்டுகள் தண்டனையை வழங்க முடியாது என சட்டத்தில் உள்ளது என்றார். மேலும் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்கள் குறித்து சட்டத்தில் எதுவும் குறிப்படப்படவில்லை. எனவே கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களுக்கு தண்டனை சட்டம் இல்லை என்றும் கூறினார்.

வேறு அமர்வுக்கு மாற்றம்.....இதைக் கேட்ட நீதிபதிகள், திருமணத்தின் புனிதத்தைக் காப்பாற்ற இந்த சட்டப்பிரிவு அவசியம். அதே நேரத்தில் பெண் உரிமை, ஆண் - பெண் சமநிலை போன்றவற்றை காப்பாற்ற அதில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான விசாரணை நடைபெறும்.  இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பதற்கு பதில், இதைவிட அதிகமான நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தால் நான்றாக இருக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  இதனால், இந்த வழக்கு விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்படுவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது  அதன் படி இந்த வழக்கில் தலைமை  நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமியினான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது.  தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

சட்டவிரோதமானது....பெண்ணின் எஜமானர் கணவன் அல்ல.  ஆணுக்கு சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும்.  பெண்ணுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும். தகாத உறவு விவகாரத்தில் ஆணுடன் பெண்ணுக்கும் தண்டனை வழங்கக்கோரும் வழக்கில் தலைமை நீதிபதி கருத்து. தகாத உறவில்  ஈடுபடும் ஆஅணுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு  அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது கிரிமினல் குற்றம் இல்லை. 497-ஆவது பிரிவு சட்டவிரோதமானது  என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து