முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு: கேரளாவில் நாளை முழுஅடைப்பு போராட்டத்திற்கு சிவசேனா அழைப்பு

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை அக்டோபர் 1ஆம் தேதி கேரளாவில் முழுஅடைப்புக்கு சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது.

கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு  தீர்ப்பளித்தது. "குறிப்பிட்ட வயது பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது பெண்களுக்கு எதிராக காட்டப்படும் பாரபட்சம்; இது ஹிந்து பெண்களுக்கான உரிமை மறுப்பு' என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

5 நீதிபதிகளில் நான்கு பேர், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாலும், அமர்வில் இடம் பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும், மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இந்நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை 1ஆம் தேதி கேரளாவில் 12 மணி நேர முழுஅடைப்புக்கு சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து