முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைந்தால் ரூ.30 கோடி என பேரம்: கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,பா.ஜ.க.வில் இணைந்தால் ரூ.30 கோடி, அமைச்சர் பதவி தருவதாக அக் கட்சி கூறியதாக கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவர் லட்சுமி ஹெப்பாள்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பெலகாவியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:அண்மையில் ம.ஜ.த.-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க முற்பட்ட பா.ஜ.க.வினர் பலர் என்னை தொடர்பு கொண்டு, காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க.வுக்கு வந்தால் ரூ.30 கோடி, அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறியிருந்தனர். அப்போது நான் ஐதராபாத்தில் இருந்தேன். தொலைபேசி மூலமாக பா.ஜ.க. தலைவர்களை பேசியதை பதிவுசெய்து, அதை காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் காட்டினேன்.

பா.ஜ.க.வினர் என்னை அவர்கள் கட்சிக்கு இழுக்க மேற்கொண்ட முயற்சிகளைத்தான் கூற விரும்புகிறேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்து கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜ.க செய்த சதியை பகிரங்கப்படுத்த விரும்பினேன். பா.ஜ.க.வினரின் ஆசை வார்த்தைகளுக்கு நான் இணங்காததோடு, எந்த சூழலிலும் காங்கிரஸ் கட்சியை விட்டுவிலக மாட்டேன் என்று அவர்களிடம் கூறியிருந்தேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து