எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துபாய் : ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
பீல்டிங் தேர்வு
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார்.
120 ரன்கள்...
வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. 17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.
அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்கள், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டாக களம் இறங்கிய முகமது மிதுரை மின்னல் வேகத்தில் ஜடேஜா ரன்அவுட் ஆக்கினார்.
லிட்டோன் தாஸ்...
இதனால் 39 ரன்னுக்குள் வங்காள தேசம் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லிட்டோன் தாஸ் சதம் அடித்தார். சதம் அடித்த லிட்டோன் தாஸ், கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் எம்எஸ் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார். மெஹ்முதுல்லா 4 ரன்னிலும், சதம் அடித்த லிட்டோன் தாஸ் 121 ரன்னிலும் வெளியேறினார்கள்.
223 ரன்கள்...
சவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 48.3 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
தடுமாற்றம்...
இதைத்தொடர்ந்து, இந்திய அணி சேசிங் செய்ய தொடங்கியது, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 15 ரன்கள் அடித்திருந்த தவான், நஸ்முல் இஸ்லாம் பந்துவீச்சில் சவுமியா சர்காரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு 2 ரன்களில் மோர்டாசா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ரோகித் 48 ரன்...
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா ரூபல் ஹூசைன் பந்தில் நஸ்முல் இஸ்லாமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 53 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் எடுத்தார்.
தினேஷ் கார்த்திக்...
பின்னர் களமிறங்கிய டோனி, 4-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்தார். வங்காளதேச வீரர்களின் பந்துகளை பொறுப்பான முறையில் எதிர்கொண்ட இவர்கள் அணியின் எண்ணிக்கையை சீரான வேகத்தில் உயர்த்தினர். ஆனால், மகமதுல்லா வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் 37 ரன்கள் அடித்திருந்த போது எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ரிட்டயர்ட் ஹர்ட்...
டோனி - தினேஷ் கார்த்திக் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவித்தது. கார்த்திக் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலேயே 36 ரன்களில் முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்தில் டோனி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவுக்கு ஆரம்பத்திலேயே தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் பாதி ஆட்டத்திலேயே வெளியேறிவிட்டார்.
இந்தியா திணறல்
இதனால், 169 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்ததால் இந்திய அணியின் ரன் ரேட் விகிதம் குறைந்து ஆட்டத்தில் வங்காளதேச அணியின் கை ஓங்கியது. இருந்தாலும் அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையையும் உயர்த்தினர். இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்த பதட்டம் தனிந்து வெற்றியை நோக்கி இந்தியா பயணித்தது.
இந்தியா வெற்றி...
ஆனால் வெற்றிக்கு 11 ரன்களே தேவை என்ற நிலையில் 23 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்த புவனேஷ்வர் குமாரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். தசைப்பிடிப்பினால் வெளியேறிய ஜாதவ் மீண்டும் களமிறங்கினார். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 223 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. கேதர் ஜாதவ் 23 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 5 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
7-வது முறை சாம்பியன்
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 48 ரன்கள், தினேஷ் கார்த்திக் 37 ரன்கள், டோனி 36 ரன்கள் குவித்தனர். வங்காளதேச அணியில் முஸ்தாபிசூர் மற்றும் மோர்டாசா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் இதுவரை ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா 7-வது முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.