முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் உள்மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 2 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை நிறைவடைந்த நிலையில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேர நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 7 செ.மீ., பரமக்குடி, இரணியல், விளாத்திகுளம் பகுதிகளில் தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருவண்ணாமலை  மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், ஏந்தல், வேங்கிக்கால், அடி அண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலும்,  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழையும், நெல்லை மாவட்டம் வள்ளியூர் ,திசையன்விளை , இட்டமொழி , மூலைக்கரைப்பட்டி பகுதிகளில் இடி , மின்னலுடன் கூடிய கன மழையும், திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகை, கரூர், மதுரை, அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து