முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் : சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 2 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்தியாவில் பகல்-இரவு டெஸ்டை நடத்த வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தி உள்ளார்.

11 போட்டிகள்

பகல்-இரவு டெஸ்ட் போட்டி 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு அடிலெய்டுவில் நடந்த இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து மோதின. இதுவரை 11 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பி.சி.சி.ஐ, இதற்கு ஆதரவாக இல்லை. இதுவரை இந்தியாவில் ஒரு பகல்-இரவு டெஸ்ட் போட்டி கூட நடைபெறவில்லை.

ரசிகர்களை கவர...

இந்த நிலையில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்தியாவில் பகல்-இரவு டெஸ்டை நடத்த வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறும்போது, பகல்-இரவு டெஸ்டில் நாம் ஏன்? இன்னும் விளையாடாமல் இருக்கிறோம். அதிகமான ரசிகர்களை கவர பகல்-இரவு டெஸ்ட் அவசியமானது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து