முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்

புதன்கிழமை, 3 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் மாற்றம்

தமிழகத்தில் நேற்று மீண்டும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் சாரங்கன் தமிழ்நாடு குற்ற ஆவணக் காப்பக ஐ.ஜி. யாக மாற்றப்பட்டிருந்தார், தற்போது மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். இதே போன்று நிதி நிறுவன விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஜி. பிரமோத்குமார் காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். தற்போது அவர் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலர் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:-

அகதிகள் முகாம்...

கோவை காவல் ஆணையராக பதவி வகிக்கும் பெரியய்யா மேற்கு மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை, அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக பதவி வகிக்கும் சுமித்சரண் கோவை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை, மாநில குற்ற ஆவணக் காப்பக ஐ.ஜி.யாக பதவி வகிக்கும் சாரங்கன் அசோக் நகர் காவலர் பயிற்சி கல்லூரி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலிலிருந்த ஐ.ஜி. ப்ரமோத் குமார் மண்டபம் அகதிகள் முகாம் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் ஏ.டி.ஜி.பி. அளவிலான பதவியாக இருந்த இந்தப் பொறுப்பு தற்போது ஐ.ஜி. அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து