எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,மதுரை ராசியான மாவட்டம், இங்கு தொட்டது துலங்கும் என்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்பு தமிழக முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-எய்ம்ஸ் மருத்துவமனையைப் பொறுத்தவரைக்கும் அம்மா இருக்கின்ற போதே, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, அவரது வேண்டுகோளை ஏற்று, மத்தியில் ஆளுகின்ற பாரதீய ஜனதா, பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தில் மதுரையிலே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பைத் தந்திருக்கின்றார். விரைவிலே பாரதப் பிரதமரை சந்திப்பேன். அவரிடத்திலே கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொள்வேன். நிச்சயமாக மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரும். இதில் எந்தவித ஐயப்பாடும் தேவையில்லை என்று தெரிவித்தார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவை வருமாறு:-
கேள்வி: தமிழகத்தில் 7-ஆம் தேதியிலிருந்து பருவ மழை பொழியும் என்று வானிலை மையம் சொல்லியிருக்கிறது. அதற்கு எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?
பதில்: பருவ மழை முன்னெச்சரிக்கையைப் பொறுத்தவரைக்கும், கிட்டத்தட்ட 3 முறை அரசினுடைய உயர் அதிகாரிகளை அழைத்து தலைமைச் செயலகத்திலே அவர்களுடைய ஆலோசனைகளை பெற்று அதற்குத்தகுந்த ஏற்பாட்டை அரசு செய்திருக்கிறது. வெள்ளத்தடுப்பு எச்சரிக்கையை, எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்பதில் அரசு முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்குத் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை, தேர்தலே அறிவிக்காத நிலையில் கூட்டணி பற்றி எப்படி பேச முடியும். இப்பொழுது இருக்கின்ற பிரச்சினை, நாங்கள் தனியாக இருக்கின்றோம். யாருடனும் கூட்டணி கிடையாது. அந்த அடிப்படையில் நான் என்னுடைய கருத்தைச் சொல்கிறேன்.
கேள்வி: கருணாஸ் சபாநாயகரை மாற்ற கோரி கடிதம் அளித்துள்ளது பற்றி..
பதில்: இங்கிருக்கிற பத்திரிகையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் நன்றாகத் தெரியும், ஆளும்கட்சியில், இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஒரு சபாநாயகரை, அதாவது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலே என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும் சட்டம் என்ன சொல்கிறது என்று, எங்களைவிட அதிகமாக ஊடக, பத்திரிகை நண்பர்களுக்குத் தெரியும்.
கேள்வி: ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றது பற்றி...
பதில்: ஆர்.கே.நகர் தேர்தலில் எப்படி மக்களை ஏமாற்றி தினகரன் வெற்றி பெற்றார் என்று ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் சொன்னார். திருப்பரங்குன்றத்து மக்கள் நல்ல விவேகமான மக்கள், நன்றாக சிந்தித்து செயலாற்றக் கூடியவர்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று தீர்க்கதரிசனமாக முடிவு செய்யக் கூடியவர்கள். ஏற்கனவே, எம்.ஜி.ஆர் இருந்த காலத்திலும் சரி, அம்மா இருந்த காலத்திலும் சரி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வென்ற தொகுதி திருப்பரங்குன்றம் தொகுதி. ஆகவே, வாக்காளப் பெருமக்கள் கழகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். இருபெரும் தலைவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார்கள், அந்த இயக்கத்திற்குத்தான் வாக்களிப்பார்கள். அம்மாவினுடைய அரசு தொடர்ந்து இருபெரும் தலைவர்களினுடைய பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார். மதுரை மாவட்டம் ஒரு ராசியான மாவட்டம். எம்.ஜி.ஆர் இருந்த காலத்திலும் சரி, அம்மா இருந்த காலத்திலும் சரி, இங்கே தொட்டது துலங்கும். இங்கே எது ஆரம்பித்தாலும் அது வெற்றியோடு முடியும். அந்த அடிப்படையில் முதன்முதலாக மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலின் கழகப் பணியை நாங்கள் துவக்கியிருக்கின்றோம்.
ஏற்கனவே பலமுறை ஊடகங்களில் சொல்லி விட்டோம். இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அம்மா இருந்த காலத்திலே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தார். திராவிட முன்னேற்றக் கழகம்தான் நீதிமன்றத்திற்குச் சென்றது. நீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கு முடிந்தவுடன் நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும்.
நம்முடைய அரசைப் பொறுத்தவரைக்கும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை நாங்கள் பெற்றிருக்கிறோம். 93 சதவீதம் வெற்றியை ஈட்டி, வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கின்றோம். எந்தத் தேர்தல் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம். மக்களின் பெரும்பான்மையான ஆதரவு இருக்கிறது. இருபெரும் தலைவர்களின் ஆசியோடு, இருபெரும் தலைவர்கள் விட்டுச் சென்ற பணியை நிறைவேற்றி சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிற காரணத்தினால்தான் தேசிய அளவிலே பல்வேறு துறைகள் விருது பெற்றிருக்கிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.