எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவீன இந்திய வரலாற்றிலும், தமிழகத்தின் அளப்பறிய பங்களிப்பு உரிய அளவில் இடம் பெறவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வரலாற்று பேரவையின் வெள்ளி விழா சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார், அப்போது அவர் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஓரு திரைப்படப் பாடலில், ஒரு சம்பவம் என்பது நேற்று அது சரித்திரம் என்பது இன்று அது சாதனையாவது நாளைவரும் சோதனைதான் இடைவேளை என்று பாடினார். அந்தப் பாடலில் வரும் சம்பவங்களும், சோதனைகளை சென்ற சாதனைகளும், அந்தச் சாதனைகளால் விளையும் சரித்திரமும்தான் வரலாறு ஆகிறது. தமிழ்நாட்டை மறைத்துவிட்டோ அல்லது ஒதுக்கிவிட்டோ எழுதப்படும் இந்திய வரலாறு என்பது ஒரு முழுமையான தேசத்தின் வரலாறாக, தேசிய வரலாறாக இருக்க முடியாது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தமிழ் - திராவிடம் என்கிற பண்பாட்டு மரபுகள், திராவிட மொழிக் குடும்பம், சைவ, வைணவ மரபுகள், கோயில் - சிலை வழிபாடுகள், திராவிடக் கலைகளான தென்னிந்திய கட்டிடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை இந்தியாவின் வைதீகம் உள்ளிட்ட பல்வேறு மரபுகளில் மிகுந்த தாக்கங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
எனவே, அவற்றைத் தவிர்த்துவிட்டு இந்திய பண்பாடு, நம்பிக்கை மரபுகளை யாரும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாது. தமிழர்கள், கடல் கடந்து சென்று வாணிபம் செய்திருக்கிறார்கள். யவனர்களின் அத்துமீறல்களை எதிர்த்து வென்றவர்கள் சேரர்கள். இலங்கைக்கும், தமிழ் அரசுகளுக்கும் இடையிலான அரசியல், ராணுவ, வணிக பண்பாட்டு உறவுகள், இந்திய தேசிய வரலாற்றில் தமிழ்நாட்டிற்கான தன்னிகரற்ற பங்கினை நிரூபிப்பதாக உள்ளன. சங்க காலச் சோழ மன்னன் கரிகால் வளவனுக்கு முன்னரேயே இத்தகைய உறவுகள் இருந்து வரலாற்று தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன என்பதை கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இந்திய வரலாற்றிலேயே கடல் கடந்து, பேரரசை உருவாக்கிய ஒரே அரச வம்சம் தஞ்சையைச் சார்ந்த சோழர் வம்சமே ஆகும். அதுமட்டுமல்ல,தென்கிழக்கு ஆசிய நாடுகளில்பண்பாடு, கலைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தவர்களும் நமது தமிழர்களே ஆவர். அந்தக் காலம் முதல், இன்றைய தினம் வரை, அனைத்து மக்களையும், அனைத்து மதத்தினரையும், அன்புடன் நடத்தி, சமூக நல்லிணக்கத்துடன், பிறருக்கு முன்மாதிரியாக, ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உயரிய பண்பினைக் கொண்டவர்கள் தமிழர்கள். அதுதான் தமிழ் மண்ணின் மாண்பு. அதன் காரணத்தினாலேதான் தமிழகம், அப்போதும், இப்போதும், அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. அத்தகைய காரணங்களால்தான், தமிழ் மண்ணில் சமணமும், பௌத்தமும், சைவமும், வைணமும், இஸ்லாமும், கிறித்துவமும் செழித்து வளர்ந்தன. ஆனால், இந்திய தேசத்தின் வரலாறு வரையப்படும்போது, இதனைக் கருத்தில் கொள்ளாமல், கங்கை கரையை மையமாக வைத்து வரையப்பட்டது.
அதனால்தான் தென்னிந்தியா - தமிழகம் போன்றவற்றின் பண்பாடுகள் புறக்கணிக்கப்படக்கூடிய துணை மரபுகளாக இருந்தன. கங்கை கரை நாகரிகங்களின், பேரரசுகளின், பண்பாடுகளின், விரிவாக்கம் மட்டுமே இந்திய வரலாறு என்ற அளவில் மேற்கொள்ளப்பட்டது. இது தவறான அணுகுமுறை என்பதால்தான், வின்சென்ட் ஸ்மித் போன்ற வரலாற்றாளர்கள் இந்திய வரலாறு காவிரிக் கரையிலிருந்து துவங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினர். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே தான், தென்னிந்திய வரலாற்றுப் பேரவை, தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை போன்ற தமிழ் வரலாற்று ஆய்வு அமைப்புகள், தமிழக பண்பாடு குறித்து மறைக்கப்பட்ட தகவல்களை, அறிவியல் முறையில் உறுதி செய்து, தமிழகத்திற்கும் தென்னகத்திற்கும், இந்திய தேசிய வரலாற்றில் உரிய இடம் கிடைக்கச் செய்ய முனைப்புடன் பணியாற்றி வருகின்றன. இந்த சிறப்பான செயல்களைப் பெரிதும் பாராட்டி, உங்கள் பணி வெற்றியுடன் தொடர்ந்திட எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நவீன இந்திய வரலாற்றிலும், தமிழகத்தின் அளப்பறிய பங்களிப்பு அதற்கு உரிய அளவில் இடம் பெறவில்லை என்பதுதான் அது. இது வேதனைக்குரிய ஒன்றாகும். நவீன இந்தியாவில், சமூக மாற்றங்களை முன்வைத்து அரசியல் இயக்கம் நடத்திய ஒரே மாநிலம், அன்றைய சென்னை இராஜதானி, அதாவது இன்றைய தமிழகம். தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு சமூக சேவர்கள் ஆற்றிய பணி இருட்டடிப்பு செய்யப்பட்டு இந்திய தேசிய வரலாற்றில் மறைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், சமூக மாற்றத்தை மையமாகக் கொண்ட அரசியல் 1852 ஆம் ஆண்டு ஆரம்பித்துவிட்டது. 1887 ஆம் ஆண்டில் சென்னையில்தான் இந்திய தேசிய சமூக காங்கிரஸ் என்ற சமூக சிந்தனையாளர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.சமூக நீதி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகியவை குறித்தும், இந்திய விடுதலைக்காகவும் கனல் தெறிக்கும் கவிதைகளை நாட்டுக்குஅர்ப்பணித்த மகாகவி சுப்ரமணிய பாரதிக்கு தேசிய வரலாற்றில் உரிய அளவில் இடமில்லை என்பது வருந்தத்தக்கது.
இங்கிலாந்து நாட்டில் மகளிருக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு முன்பே, சென்னை ராஜதானியில் மகளிருக்கு வாக்குரிமை கிடைக்கச் செய்த கட்சி, நீதிக் கட்சி! அதற்கும் தேசிய வரலாற்றில் உரிய இடம் அளிக்கப்படவில்லை. மக்கள் செல்வாக்கு படைத்த திராவிட இயக்கத்திலிருந்து தோன்றிய அண்ணா, எம்.ஜி.ஆர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இந்த நாட்டுக்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியவாகும். தமிழர்களுக்கு, தமிழ் மண்ணிற்கு, இந்திய தேசத்திற்கு, ஆற்றிய அந்த பங்கினை தேசிய வரலாற்று புத்தகங்கள் குறிப்பிடுவதில்லை. இந்த வரலாற்றை இந்திய மக்கள் அனைவரும் அறியும் வகையில் இந்திய தேசிய வரலாறு படைக்கப்பட வேண்டும். திராவிடர் தலைவர்களின் தொண்டுகளையும், அம்பேத்கரின் பங்களிப்பினையும் எவ்வகையிலும் குறைத்திடாது, இந்திய தேசிய வரலாற்றில் இணைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்களின் பண்பாடுகள் இந்திய வரலாற்றில் உரிய இடத்தினைப் பெறவும், உங்களது ஆய்வுப் பணிகள் மேலும் செம்மையாக நடைபெறவும் அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு