எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தொண்டர்களின் எழுச்சியை கண்டு, அ.தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்த தினகரன் சதி செய்கிறார் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தினகரன் பேட்டி...
கடந்த 2017 ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்ததன்படி அவரை சந்தித்தேன் என்றும், மேலும், கடந்த செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் என்னை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் என்றும் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
சந்திக்கவே இல்லை...
இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்து பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-
டி.டி.வி. தினகரன் புதிய பிரச்சனை ஒன்றை கூறி மக்களையும், கட்சி தொண்டர்களையும் குழப்புகிறார். இந்த குழப்பங்கள் அனைத்தையும் தினகரன் தங்கத்தமிழ்செல்வன் மூலமே ஏற்படுத்தி வருகிறார். குறிப்பிட்ட அன்றைய தினத்தில் தினகரனை சந்தித்தது உண்மைதான். ஆனால் எப்போது நான் எடப்பாடியுடன் இணைந்தேனோ அப்போதிருந்து தினகரனை திரும்பவும் சந்திக்கவே இல்லை.
சதி செய்கிறார்...
ஆர்.கே.நகரில் எப்படி பொய்களை சொல்லி சொல்லியே ஜெயித்தாரோ, அதே போல திருப்பரங்குன்றத்திலும் பொய்களை அள்ளி வீசி இடைத்தேர்தலை ஜெயிக்கலாம் என நினைக்கிறார். மேலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அ.தி.மு.க.-வின் எழுச்சியை தடுக்கவும், கட்சியில் பிளவை ஏற்படுத்தவுமே டி.டி.வி. சதி செய்கிறார். இத்தனை தரக்குறைவான, சின்னத்தனமான அரசியலை தினகரன் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. தினகரன் வாயை திறந்தாலே பொய் பொய்யாக பேசுகிறார். ஆனால் உண்மைக்கு மாறாக இதுவரை பொய்யான தகவல் எதையுமே சொன்னதில்லை.
தொடர்பே இல்லை...
2017-ம் ஆண்டு, ஜூலை 12-ம் தேதி டி.டி.வி. தினகரனை சந்தித்தது உண்மைதான். அப்போது நான் தர்மயுத்தம் நடத்தி வந்தேன். எனவே அவரை சந்திக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் நூறு முறையாவது எனக்கு அழைப்பு வந்தது. எனவே மரியாதை நிமித்தமாக அவரை நான் சந்தித்தேன். இது எனது உடன் இருந்தவர்களுக்கு கூட தெரியாது. ஆனால், அவர் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் பேசினார். எனவே நான் அவரை விட்டு விலகி வந்து விட்டேன்.
இதற்கு அடுத்த மாதம்தான் அ.தி.மு.க. இணைப்பு நடைபெற்றது. அதன்பிறகு தினகரனுடன் எனக்கு தொடர்பே இல்லை.
வருத்தம் தெரிவித்தார்...
தினகரன் தரப்பு அளித்த பிரஸ் மீட்டையடுத்து, தினகரனுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவர்கள் சின்னத்தனமாக அரசியல் செய்வார்கள் என எனக்கு தெரியாது என்று அந்த நபர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார். பா.ஜ.க.வுடன் நான் கூட்டணி வைத்திருந்ததாக 4 நாட்கள் முன்புதான் தினகரன் கூறியிருந்தார். திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பணிகளை பார்த்ததும் தினகரன் விரக்தியில் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். எந்த இயக்கத்தில் இருக்கிறோமோ அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். எனது அரசியல் பயணத்தை இப்படித்தான் நடத்தி வருகிறேன்.
18 எம்.எல்.ஏ.க்களாக...
நான் தர்மயுத்தம் நடத்திய போது 36 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் உள்ளதாக தினகரன் ஊடகங்களிடம் தெரிவித்தார். நான் தர்மயுத்தம் நடத்தும் நிலையில், எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. கட்சி உடையப் போகிறதே என நான் வருத்தப்பட்டேன். அப்போதுதான் அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி உள்ளிட்டோர் என்னை சந்தித்து, நீங்கள் எதற்காக தர்மயுத்தம் நடத்துகிறீர்களோ அதே மனநிலையில்தான் நாங்கள் உள்ளோம். தினகரனால் கட்சி உடைந்துவிட கூடாது என்றனர். எனவே, மாபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி தாருங்கள். எனக்கு பதவி வேண்டாம் என்றுதான் கூறினேன். ஆனால் நீங்களும் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என கூறி எனக்கு துணை முதல்வர் பதவி தந்தனர். இப்படித்தான் நான் அ.தி.மு.க. இணைப்பை ஏற்படுத்தினேன். இதனால் தினகரனுக்கு, 36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு என்பது 18 எம்.எல்.ஏ.க்களாக குறைந்தது.
என்ன அருகதை இருக்கிறது
நான் ஒன்று கேட்கிறேன். அம்மா 74 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போது நாங்கள் எல்லாம் தாடி வைத்துக் கொண்டு, கோவில் கோவிலாக போய்க் கொண்டிருந்தோம். ஆனால் தினகரன் அந்தப் பக்கமே வரவில்லை. அவர் என்ன செய்து கொண்டிருந்தார். எந்தக் கோவிலுக்குப் போனார். அவருக்கு என்ன அருகதை இருக்கிறது அம்மா பற்றிப் பேச. அதுதான் தினகரன் மீது எனக்கு கோபம். பேட்டியின் போது அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஆர்.பி. உதயக்குமார், மாபா பாண்டியராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.