முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோவில் நடை 18-ம் தேதி திறப்பு:பாதுகாப்புக்காக 500 பெண் போலீசை நியமிக்க கேரள காவல் துறை முடிவு

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

கொச்சி,வரும் 18-ம் தேதி சபரிமலை கோவில் திறந்து பூஜை பணிகள் தொடங்க உள்ள நிலையில் பாதுகாப்புக்காக 500 பெண் போலீஸ் நியமிக்கப்பட உள்ளதாக கேரள காவல்துறை அறிவித்துள்ளது.

அனைத்து வயதுப் பெண்களும சபரிமலை கோவிலுக்கு செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து பெண் பக்தர்கள் வருகைக்கான ஏற்பாடுகளை சபரிமலை கோயில் நிர்வாகம் செய்யத் தொடங்கியுள்ளது. இதற்காக 500 பெண் போலீசார் நியமிக்கப்பட உள்ளதாக கேரள காவல்துறை அறிவித்துள்ளது.

காவல்துறை செயல்பாடுகள் குறித்து கேரள காவல்துறை தலைவர் பெஹ்ரா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,சபரிமலை கோவில் தரிசனத்தின் போது பாதுகாப்புக்காக 500 பெண் காவலர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். கேரள காவல் துறை 6,000 பெண் போலீஸ் அதிகாரிகளைக் கொண்டது. சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்புக்கு திட்டமிட்டுள்ளோம். இதற்காக மேலும் 500 பேர் தேவை என்பதால் விரைவில் 500 பெண் காவல் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பெஹ்ரா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து