முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக அதிக அளவு மழை இருக்காது:தமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை வாபஸ் ஆனது வானிலை ஆய்வு மையம் திடீர் அறிவிப்பால் மக்கள் நிம்மதி

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது.

இதன் காரணமாக வருகிற திங்கட்கிழமை வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. குறிப்பாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் (நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி) மிக கனமழை பெய்யும் என்று ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அலர்ட் வாபஸ்...இந்த நிலையில், மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இல்லாததால், ரெட் அலார்ட் எச்சரிக்கை விலக்கி கொள்ளப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, விருதுநகர் நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட ரெட் அலார்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 7-ம் தேதி அன்று (இன்று) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. தமிழகத்தின் சில இடங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பில்லாததால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதிக கனமழை...இன்று மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட அதிக கனமழை வாய்ப்பு தற்போது இல்லாத நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் கிழக்கு அரச்பிக்கடலில் தற்போது நிலவிக் கொண்டிருக்கின்ற காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், தெற்கு அந்தமான் பகுதியில் தற்போதுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாகவும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. மீனவர்களுக்கு....மீனவர்கள் நாளை வரை தென்கிழக்கு அரபி கடல், லட்சதீவு, குமரி கடல் பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தை பொருத்த வரையில் அதிகபட்சமாக காரைக்கால் மாவட்டத்தில் 12 செ.மீ மழையும், விழுப்புரத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. தென்கிழக்குப் பருவமழையும் படிப்படியாக விலகி வருகிறது, இந்த சூழ்நிலையில் வடகிழக்கு பருவ மழை 8-ம் தேதி துவங்கும். இவ்வாறு வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து