முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினகரன் அவ்வப்போது காமெடி செய்வார் அமைச்சர் வேலுமணி பேட்டி

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

கோவை,டி.டி.வி. தினகரன் அவ்வப்போது காமெடி செய்வார். இப்போதும் அதையேதான் செய்து வருகிறார். அவரை கட்சியை விட்டுப் போகச் சொன்னதே நானும், அமைச்சர் தங்கமணியும்தான் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.கோவை அ.தி.மு.க. அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது கூறியதாவது:-மழை வருவதற்கு முன்னரே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துறை அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்தி, மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்கினால் அகற்ற மோட்டார்கள் தேவையான அளவு இருக்கின்றது. தேவைப்படும் இடங்களில் மோட்டார்கள் வாடகைக்கு எடுக்கப்படும். மரம் அறுக்கும் இயந்திரம் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை எப்படி வந்தாலும் சமாளிக்கும் நிலை இருக்கின்றது. பாதிப்பு ஏற்பட்டால் பொது மக்களுக்கு தங்கும் இடங்கள், உணவு போன்றவை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டி.டி.வி. தினகரன் அவ்வப்போது நிறைய காமெடி செய்வார். டி.டி.வி. தினகரனை கட்சியில் இருந்து விலக சொன்னதே நானும், தங்கமணியும்தான். திருப்பரங்குன்றம் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதியாகி விட்டது என்பதால் தினகரன் இப்படி பேசுகின்றார். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். இருவரும் அண்ணன், தம்பி போல் இருக்கின்றனர்.10 வருடங்களாக கட்சியில் டி.டி.வி. தினகரன் இல்லை. அவரை ஜெயலலிதா விலக்கி வைத்திருந்தார். டி.டி.வி. தினகரன் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. தினகரனுக்கு ஓ.பி.எஸ் முழுமையாக பதில் அளித்துள்ளார். தினகரன் பேசுவதை பொருட்படுத்த தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து