எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,தலைமைச் செயலகம், மருத்துவமனை, நீதிமன்றம், குடிநீர், தெருவிளக்கு, டெலிபோன் டவர் போன்றவற்றிற்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கலந்தாய்வுக் கூட்டம்...தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மழை காலத்தில் மின்விபத்துக்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான மின் விநியோகம் செய்தல் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் மின்வாரிய உயர்அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர் பருவமழை முன்னெச்சரிக்கையாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து அமைச்சர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக ஆலோசனை மேற்கொண்டார்.
அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்...தமிழகத்தில் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் போர்கால அடிப்படையில் பழுது மற்றும் சேதங்களை சரிசெய்து மின்விநியோகிக்கும் பணியினை சிறப்பாக செய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில்அனைத்து அலுவலர்களும் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபடுவதோடு தயார்நிலையில் இருக்கவேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில் முதன்மை பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. மீதி உள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளையும் ஒரிருநாட்களில் முடித்திட வேண்டும். அனைத்து அத்தியாவசிய நிறுவனங்களுக்கும் மின் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்வாரிய அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இனைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
1) சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் மற்றும் நீரில் மூழ்கும் புதைவடங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தமிழ்நாடு மின்சார வாரிய பிரிவு அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துமாறு மின்துறை துறை அமைச்சர் தங்கமணி அறிவுரை வழங்கினார். இவைதவிர, பொதுமக்களுக்கு மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு ஒலி நாடாவை மக்களிடையே விளம்பரம் படுத்த வேண்டும்.
2) துணை மின்நிலையங்களில் மழைநீர் புகாமல் இருக்கவும் அப்படி மழைநீர் தேங்கினால் அதை வெளியேற்றிட மின் மோட்டர்கள் மற்றும் பம்புசெட்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
3) மின் வழிதடங்கள், மின் மாற்றிகள் அனைத்தையும் அவ்வப்பொழுது ஆய்வு செய்து தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
4) பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்பகிர்மானப் பெட்டிகள் உடனுக்குடன் மாற்றப்பட வேண்டும்.
5) மின்கம்பிகள் தொங்கிய நிலையில் இருந்தால் அவற்றை உடனே சரிசெய்ய வேண்டும்.
6) மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ள நேரங்களில் மாவட்ட நிர்வாகம் நடத்தும் ஆலோசனை கூட்டங்களில் மேற்பார்வை பொறியாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு அறிவுரைக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
7) மின்பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
8) தலைமைச் செயலகம், மருத்துவமனை, நீதிமன்றம், குடிநீர், தெருவிளக்கு, டெலிபோன் டவர் போன்றவற்றிற்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும். இருப்பினும் இவ்வலுவலகங்கள் மின்சாரத்திற்கு மாற்றாக ஜெனரோட்டர் வசதிகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கும் தகவல்களை உடனுக்குடன் தொடர்புடைய அலுவலர்களுக்கு தெரிவித்து கோரிக்கை மற்றும் பழுதுகளை சரிசெய்து சீரான மின்விநியோகம் வழங்கிட அனைத்து அலுவலர்களும் சிறப்பாக ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு கலந்தாய்வுக் கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.
இக் கூட்டத்தில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர்., இணை மேலாண்மை இயக்குநர். பி.என். ஸ்ரீதர்., நிர்வாக இயக்குநர் சி. சண்முகம் மற்றும் மின்வாரிய இயக்குநர்கள் ஹெலன்,. செந்தில் வேலன், . மு. சந்திரசேகர், எஸ். கீதா,. ஆக்ஸிலியம் ஜெயமேரி, மகேஸ்வரிபாய்,. சுந்தரவதனம் மற்றும் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? - தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிடு
17 Apr 2024சென்னை : மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிட்டுள்ளது.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு