எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஜ்கோட் : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே ராஜ்கோட்டில் நடந்த டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
பிரித்வி ஷா அபாரம்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த 3 தினங்களுக்கு முன் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது. புதுமுக வீரர் பிரித்வி ஷா 134 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் விராட் கோலி (72 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (17 ரன்) களத்தில் இருந்தனர்.
ரிஷாப் பான்ட் அதிரடி
இந்த நிலையில் 2-வது நாளில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நீடித்தது. அனுபவமற்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை நமது வீரர்கள் நொறுக்கித் தள்ளினர். கேப்டன் கோலி சற்று நிதானம் காட்ட, ரிஷாப் பான்ட் அதிரடியாக ஆடினார். கீமோ பால், ரோஸ்டன் சேசின் பந்து வீச்சில் சிக்சர்களை பறக்க விட்டார். மறுமுனையில் கோலி பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 24-வது சதத்தை பூர்த்தி செய்தார். சதத்தை நெருங்கிய ரிஷாப் பான்ட் 92 ரன்களில் (84 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) தேவேந்திர பிஷூவின் சுழற்பந்து வீச்சில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் ஆகிப்போனார். அடுத்து ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இறங்கினார். அணியின் ஸ்கோர் 534 ரன்களாக உயர்ந்தபோது, விராட் கோலி 139 ரன்களில் (230 பந்து, 10 பவுண்டரி) பந்தை தூக்கியடித்தபோது கேட்ச் ஆனார்.
ஜடேஜா சதம்...
இதைத் தொடர்ந்து வந்த அஸ்வின் (7 ரன்), குல்தீப் யாதவ் (12 ரன்), உமேஷ் யாதவ் (22 ரன்) உள்ளிட்டோர் அதிக நேரம் நிலைக்கவில்லை. இதற்கிடையே அரைசதத்தை கடந்த பிறகு அட்டகாசப்படுத்திய ஜடேஜா, சுழற்பந்து வீச்சாளர்கள் தேவேந்திர பிஷூ, ரோஸ்டன் சேசின் ஓவர்களில் மொத்தம் 5 சிக்சர்களை விரட்டியடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதில் ஒரு சிக்சர் அணியின் ஸ்கோர் 600 ரன்களை கடக்க உதவியது. 78 ரன்களில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ஜடேஜா, கடைசி விக்கெட் ஜோடியான முகமது ஷமியின் துணையுடன் தனது முதலாவது சர்வதேச சதத்தை எட்டினார். இது அவரது சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
649 ரன்கள் குவிப்பு
ஜடேஜா செஞ்சுரி போட்டதும், இந்திய அணி தனது இன்னிங்சை முடித்துக் கொண்டது. இதன்படி இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ஜடேஜா 100 ரன்களுடனும் (132 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), முகமது ஷமி 2 ரன்னுடனும் (6 பந்து) அவுட் ஆகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணியின் மெகா ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1979-ம் ஆண்டு கான்பூரில் நடந்த டெஸ்டில் 7 விக்கெட்டுக்கு 644 ரன்கள் எடுத்ததே வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்சமாக இருந்தது.
மே.இ.தீவுகள் திணறல்
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்பார்த்தது போலவே திணறியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் (2 ரன்), கீரன் பவெல் (1 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காலி செய்தார். இதன் பின்னர் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவின் சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிரண்டனர். 2-வது நாள் முடிவில் அந்த அணி முதல் இன்னிங்சில் 29 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 94 ரன்களுடன் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் 27 ரன்களுடனும், கீமோ பால் 13 ரன்களுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். இந்திய தரப்பில் ஷமி 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
3-வது நாள் ஆட்டம்
நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சேஸ் 53 ரன்கள் எடுத்து அஸ்வின் சுழலில் போல்டானார். பால் அதிரடியாக விளையாடி 47 ரன்கள் சேர்த்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த லெவிஸ், கேப்ரியல் ஆகியோரையும் அஸ்வின் சாய்க்க, அந்த அணி 48 ஓவர்களில் 181 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து பாலோ ஆன் ஆனது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டையும் ஷமி 2 விக்கெட்டையும் உமேஷ் யாதவ், குல்தீப், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
குல்தீப் அபாரம்
பாலோ ஆன் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆட்டத்தை தொடர்ந்தது பிராத்வொயிட் 10 ரன்களில் அஸ்வின் சுழலில் பிருத்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பாவெலும் (21 ரன்) ஷான் ஹோப்பும் ஆடினர். நேற்றைய இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 196 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்களில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார்.
குல்தீப் யாதவ் சாதனை
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 181 ரன்னில் சுருண்டது. அஸ்வின் நான்கு விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பாலோ-ஆன் ஆனதால் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.
குல்தீப் யாதவின் அபார பந்து வீச்சால் 196 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். முதன்முறையாக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய குல்தீப் யாதவ், மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஐந்து விக்கெடடுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். இந்த சாதனையைப் படைத்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் புவனேஸ்வர் குமார் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தியாவின் அதிக பட்ச ஸ்கோர்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோரின் சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1979-ம் ஆண்டு கான்பூர் மைதானத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 644 ரன் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. ஒட்டு மொத்தத்தில் இந்தியாவின் 7-வது அதிகபட்ச ஸ்கோராகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.