முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை நவம்பர் மாதத்தில் இந்தியா வாங்கும் மத்திய அமைச்சர் பிரதான் உறுதி

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை நவம்பரில் இந்தியா வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்து டெல்லியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது, எங்களது சொந்த நாட்டுத் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்காக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இருக்கிறோம். எங்கள் தேவைகளை உலகத் தலைவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் தடையையும் மீறி ஈரானிலிருந்து 90 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை நவம்பர் மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்யும் என்பது உறுதியாகியுள்ளது.ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. ஈரான் மீதான தடையானது வரும் நவம்பர் 4-ம் தேதி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து