முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் வர்த்தக சபையின் பவளவிழா சென்னையில் நாளை நடைபெறுகிறது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழ் வர்த்தக சபையின் 75 ஆண்டு பவளவிழா சென்னையில் நாளை நடைபெறுகிறது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பங்கேற்கிறார்.

தமிழ் வர்த்தக பேரவையின் தலைவர் சோழநாச்சியார் ராஜசேகர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழ் வர்த்தக சபை, கடந்த 1944 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.சண்முகம் செட்டியாரால் தொடங்கிவைக்கப்பட்டது. மிகவும் பழமையான இந்த வர்த்தக பேரவை வர்த்தக நிறுவனங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் பாலமாக விளங்குகிறது. இந்திய வர்த்தக அமைச்சகத்தால் அங்கீகாரம் பெற்ற இந்த அமைப்பு ஏற்றுமதியாளர்களுக்கு தோற்றம் சான்றிதழை வழங்கி வருகிறது. இதன் பவளவிழா நாளை ( 11-ம் தேதி) மாலை சென்னை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தலைமை விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு தொழிலதிபர்கள் தொழிற்நிறுவனத்தை சார்ந்தவர்கள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து