முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., படித்து முடிப்பவர்கள் 5 ஆண்டுகள் கிராம சேவை கட்டாயம்

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., போன்ற முதுநிலை மருத்துவ படிப்பை முடிப்பவர்கள் கட்டாயமாக கிராமப் புறத்தில் 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர் தீதிமன்றத்தில் நீதிபதி என். கிருபாகரன் முன்னிலையில் தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்த மனுவில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த மனுவில் தமிழக அரசு மேலும் தெரிவித்துள்ளதாவது:- தமிழகத்தில், 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில், முதுநிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்பை முடிப்பவர்கள், 2 ஆண்டுகள் கிராமப்புற அரசு மருத்துவ மனைகளில் பணியாற்ற வேண்டியது கட்டாயம். இல்லையெனில், முதுநிலை மருத்துவம் படித்த டாக்டர்கள் ரூ.20 லட்சத்தை அரசுக்கு செலுத்தி, கிராமப் புறத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தை முடித்து கொள்ள வேண்டும்.இந்நிலையில், கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து 5ஆண்டுகளாகவும் ஒப்பந்தத்தை முடித்து கொள்ள அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை ரூ.20லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாகவும் உயர்த்தலாம் என கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்திருந்தார்.அதன்படி, கிராமப்புறங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் வரை பணியாற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து