முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டன்சத்திரத்தில் வட்டார அளவிலான புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம்

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான புதுமண தம்பதிகளுக்கான பணியரங்கம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமகள் தலைமையில் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் நகராட்சி மருத்துவ அலுவலர் சுபா முன்னிலை வகித்து பேசினார். கருத்தரங்கத்தில்  பாதுகாப்பான தாய்மை, கர்ப்பகால கவணிப்புகள், கர்ப்பகால வலிகள் மற்றும் பிரச்சனைகள், வேலைக்குச் செல்லும் கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு, பாலூட்டும் தாய்மார்களுக்கான பராமரிப்பு, பிறந்த குழந்தை பராமரிப்பு, கூடுதல் உணவு, தடுப்பூசிகள், குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகள், மகப்பெரு நலஉதவித் திட்டங்கள் குறித்து கருத்துரை வழங்கப்பட்டது. வட்டாரளவிலிருந்து வந்த 30 ஜோடிகளுக்கு எடை, உயரம், ஹீமோகுலோபின் அளவு, இரத்த அழுத்தம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டது. கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் சாந்தாமணி, மயிலாத்தாள் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட செல்லம்மாள் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து