முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி தொழில்நுட்ப வருங்காலம் குறித்து 23-ம் தேதி விசாகப்பட்டினம் மாநாட்டில் உலகின் முதல் பெண் ரோபோ பேசுகிறார் - முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

விசாகப்பட்டினம் : நிதி தொழில்நுட்பத்தின் வருங்காலம் குறித்து வரும்  23-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் உலகின் முதல் பெண் ரோபோ சோபியா பேசுகிறார்.

நிதித் தொழில்நுட்பத்தின் வருங்காலம், வளர்ச்சி குறித்து விசாகப்பட்டினத்தில் உள்ள பிண்டெக் வேலியில் வரும் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மாநாடு நடக்க உள்ளது. இதில் பெண் ரோபோ சோபியா கலந்து கொள்கிறார்.

வரும் 22-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து ஆந்திரா வரும் சோபியாவுக்கு, அன்றே செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்கள் பொருத்தப்படும். முன்கூட்டிய தீர்மானிக்கப்பட்ட தலைப்புகளில் சோபியா உரை நிகழ்த்த உள்ளார்.

அடுத்த நாள் மாநாட்டில் பேசும் சோபியா, நிதித்துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், ஐ.டி. அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இந்த விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்கிறார்.

சோபியாவை இயக்கும் பொறியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும், ரோபோவுடன் விசாகப்பட்டினம் வருகின்றனர். ஹாங்காங்கைச் சேர்ந்த ஹான்சன் ரோபாடிக்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மனித ரோபோ சோபியா. உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோவான சோபியாவுக்கு டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் கணக்குகள் உள்ளன.

குரலை உணர்ந்துகொள்ளும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள சோபியாவால் நமது முகங்களைப் படிக்க முடியும். இதற்காக சோபியாவின் கண்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை கணினி அல்காரிதம்கள் மூலம் செயல்படுகின்றன. இதன்மூலம் நாம் கேட்கும் கேள்விக்கு ஏற்ப சோபியா பதில் கூறுவார். ரோபோ சோபியாவுக்கு சவுதி குடியுரிமை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து