முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மதுரைக் கிளை மறுப்பு

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : தேவர் பேரவை தலைவர் முத்தையாவின் காரை சேதப்படுத்தியது தொடர்பான கருணாஸின் வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.

கடந்த ஆண்டு பூலித்தேவன் நினைவு நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டபோது மரியாதை செலுத்த சென்ற கருணாஸுக்கும் , மற்றொரு அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இது தொடர்பாக திருநெல்வேலி போலீஸார், கருணாஸ் தரப்பைச் சேர்ந்த 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் கருணாஸுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சமீபத்தில் முன் ஜாமீன் வழங்கியது.

இதனிடையே தேவர் பேரவை தலைவர் முத்தையாவின் காரை சேதப்படுத்திது தொடர்பான தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கருணாஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டார்.

மேலும் வழக்கு தொடர்பாக 2 மாதங்களில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அப்போது உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து