எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வழங்கினர்.
அடையாள அட்டை...
அ.தி.மு.க.வின் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா கட்சி தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கினார். இதைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் அடையாள அட்டையினை வழங்கினார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அடையாள அட்டை வழங்கினர். தொடர்ந்து துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடையாள அட்டைகளை வழங்கினார்.
கட்டுக்கோப்பான இயக்கம்
அப்போது முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார். அவர் தொடங்கிய காலத்தில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு அண்ணா கண்ட கனவை நனவாக்க தன்னையே இயக்கத்திற்கு அர்ப்பணித்து கொண்டு நாட்டு மக்களுக்காக இறுதி வரை வாழ்ந்து அ.தி.மு.க. ஆட்சியையும் தமிழகத்தில் உருவாக்கி அண்ணாவின் கனவை நிறைவேற்றினார். எம்.ஜி.ஆர். இருக்கும்போது எவ்வளவு துன்பத்தை கொடுத்தார்களோ அதே துன்பத்தையும் இடர்பாடுகளையும் ஜெயலலிதாவுக்கும் கொடுத்தார்கள். அதையும் அவர் தாங்கிக் கொண்டு தன் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலையில் கூட எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தைக் காத்து அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். விட்டுச் சென்ற பணிகள் தொடர வேண்டும் என்பதற்காக தன்னையே அர்ப்பணித்து கட்டுக்கோப்பான இயக்கம் அ.தி.மு.க. என்பதை நாட்டுக்கு பறைசாற்றினார்.
வரலாற்று சிறப்புமிக்கது
அ.தி.மு.க.வுக்காக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை எல்லாம் தாண்டி அதனை எல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி அமைத்தார். எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் லட்சியங்களை நிறைவேற்றி அ.தி.மு.க. தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அல்ல, வெளிநாடுகளிலும் பரவுகின்ற அளவிற்கு கட்சியை ஜெயலலிதா வளர்த்திருக்கிறார். அவரது மறைவுக்கு பிறகு பல்வேறு சதியாளர்கள் சதி செய்தார்கள். அதனை எல்லாம் இங்கு இருக்கின்ற அத்தனை பேரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டு அதனை வீழ்த்தி இருபெரும் தலைவர்களின் லட்சியத்தை நாம் நிறைவேற்றி வருகிறோம். இந்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல் முறையாக அ.தி.மு.க.வுடைய புதிய உறுப்பினர் உரிமை சீட்டு புதுப்பிக்கும் பணி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தொடங்கி சுமார் ஒரு கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 உறுப்பினர்களை இன்றைக்கு சேர்த்திருக்கிறோம். ஜெயலலிதா இருக்கும் போது 5 ஆண்டுக் காலத்தில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டார்கள். இப்போது இந்தப் பணி தொடங்கி இந்த குறுகிய காலத்திலேயே ஒரு கோடியே 10 லட்சம் பேரை அ.தி.மு.க.வில் சேர்த்திருக்கிறோம். ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்தவர்கள் புதுப்பித்துள்ளார்கள். புதியதாக அ.தி.மு.க.வில்இணைந்தவர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்திருக்கிறார்கள். மொத்தம் இதுவரை ஒரு கோடியே 10 லட்சத்திற்கு 41 ஆயிரத்து 600 உறுப்பினர்கள் கழகத்திலே உறுப்பினர்களாக இணைந்து அ.தி.மு.க.வுக்கு வலிமை சேர்க்கும் பணியை இன்று துவக்கியுள்ளார்கள்.
50 லட்சம் உறுப்பினர்கள்
இன்றும் 6 மாதத்திலே கிட்டத்தட்ட 50 லட்சம் உறுப்பினர்கள் சேருவார்கள். ஜெயலலிதா இருக்கின்ற காலத்தில் எப்படி 1.50 கோடி உறுப்பினர்கள் இருந்தார்களோ, அதை விடக் கூடுதலான உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். அந்த அளவிற்கு இந்த இயக்கத்தின் மீது அ.தி.மு.க. மீது பொதுமக்களும் பற்றும் பாசமும் அன்பும் வைத்திருக்கிறார்கள். இருபெரும் தலைவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதுதான் எங்கள் லட்சியம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
எஃகு கோட்டையாக....
முன்னதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. தொண்டர்கள் சிந்தாமல் சிதறாமல் நம்மிடம்தான் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வரலாற்று நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. ஏனென்றால் 28 ஆண்டு காலம் அ.தி.மு.க. பொதுசெயலாளராக ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை, வேதனைகளை தாங்கி 1.50 கோடி தொண்டர்களை கொண்ட அசைக்க முடியாத எஃகு கோட்டையாக உருவாக்கி தந்துள்ளார்.
60 லட்சம் புதிய...
தொண்டர்களால் அ.தி.மு.க. வழிநடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் பூர்த்தி செய்து கொடுத்த 4 லட்சத்து 38 ஆயிரத்து 87 படிவம் பெறப்பட்டது. அதாவது மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 9 லட்சத்து 52 ஆயிரத்து 25 ஆகும். பிற மாநிலங்களில் 3583 படிவங்கள் பெறப்பட்டது. அதன் மூலம் 89 ஆயிரத்து 575 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். மொத்தத்தில் அ. தி.மு.க. புதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 ஆகும். அதாவது இன்று வரை இவ்வளவு உறுப்பினர்கள் பதிவு
செய்திருக்கிறார்கள். 90 நாட்களில் நடந்த வரலாற்று சிறப்பு சாதனை இது. இப்போது 60 லட்சம் புதிய உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு வழங்கும் பணி துவக்கி வைக்கப்படுகிறது. மேற்கொண்டு சேர்ந்த உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி. அன்பழகன், காமராஜ், கே.டி. ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, பாடநூல் வாரியத் தலைவர் பா.வளர்மதி மற்றும் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆர்.எஸ்.ராஜேஷ், வெங்கடேஷ்பாபு, எம்.பி. விருகை ரவி ஆகியோர். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.